Header image alt text

தலைநகர் கொழும்பிலிருந்து நாட்டின் ஏனைய இடங்களுக்கான உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீது விதிக்கப்பட்டிருந்த நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 25 வருடமாக விதிக்கப்பட்டிருந்த குறித்த தடை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் விமான சேவைக்காக தனியார் தேசிய விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது. Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். அத்தனகல அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை நீக்கியதன் பின்னர் குறித்த பதவிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். Read more

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்குக் கிடைத்துள்ளதென, அச்சக அதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அதற்கமைய புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், Read more

யாழில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ். கல்வியங்காட்டு பகுதியிலுள்ள மேற்படி வங்கி முகாமையாளரின் வீட்டுக்குள் நேற்று இரவு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ட்ரோன் இயந்திரத்தை பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ர்ஆஊ நிமல்சிரி தெரிவித்தார்.

திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகச் செய்தி கூறுகின்றது.

7 பேரைக் கொண்ட குறித்த திருட்டுக் குழுவில் இலங்கையர்கள் ஐவரும் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், சுப்பர் மாக்கட் உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டவர்களென்றும், Read more

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவிற்கு பிணை வழங்குவதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த மீள்திருத்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பிற்கு அறிவித்தல் விடுப்பதற்கான உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த மீள்திருத்த மனுவினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read more

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி ரஞ்சனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. Read more

புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய விசேட நிதி ஒதுக்கீடான சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாவில் அமைக்கப்பட்ட ஏழாலை மத்தி புவனேஸ்வரி அம்மன் வீதியினை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு ஏழாலை கிராம அபிவிருத்தி ஒன்றிய தலைவர் சி.கிருஸ்ணானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஏழாலை சாடியடியில் ஆரம்பித்து ஏழுகோவில் வரை செல்கின்ற குறித்த வீதி கொங்கிறீட் வீதியாக இவ்வீதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மக்கள் மயப்படுத்தும் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் கருணாகரன் தர்ஷன், ஆகியோர் கலந்துகொண்டனர். Read more

இலங்கையின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான கௌரவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. Read more