 வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இருவரையும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுகம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இருவரையும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுகம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி கம்பஹா பகுதியில் 4.4 மில்லியன் ரூபா கொள்ளை சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரில் 6 பேர் கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களில் வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இருவரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய 4 பேரும் இன்று மாலை கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
