வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு, இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா – பட்டாணிசூர் பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,
வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதனடிப்படையில், வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 3 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 151 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.