மாண்புமிகு கோட்டாபய ராஜபக்ச,
இலங்கை குடியரசு தலைவர்,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,
நாட்டின் நிலைமையைப் பற்றி ஆழமான பொருளாதாரப் பகுப்பாய்வைச் செய்தால், நாட்டின் தற்போதைய பொருளாதார அவலத்திற்கு கோவிட் பெருந்தொற்று மாத்திரம் காரணம் அல்ல என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம். Read more
		    
இலங்கை மத்திய வங்கி, அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் மீதான தடையை நீக்கியுள்ளதுடன், இறக்குமதியாளர்களுக்கு அந்நிய செலாவணி வசதிகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான  பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களான குழந்தைகளுக்கான  பால் பவுடர்,  அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெய், டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் பலர் தமிழகத்துக்கு அகதிகளாக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். 
இலங்கையில் முதன்முறையாக ரயில் ஆசனங்களை இணையவழியூடாக (Online) முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
பயங்கரவாத தடைச் சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்கள், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை இது உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றால் அதற்கு மக்கள் ஆணை அவசியம் என்றும் தெரிவித்தார். 
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார். பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்தார்.