சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் Swiss அமைப்புகளுடனும், இங்கு வாழும் பல நாட்டு மக்களின் விடுதலை அமைப்புகளும், சமூக மேம்பாட்டு அமைப்புகளும் இணைந்து நிகழ்த்தப்பட்டது.

இவ்வூர்வலத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலக்கும் அனைத்து இன மக்கள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிய அணிதிரளவும் அனைத்துலக ஆதரவு கோரியும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

இவ் ஊர்வலம் Helvetia Palace இல் தொடங்கி Sechselautenplace வரை சூறிச் நகர மத்தியினூடாக
நகர்ந்து சென்றது.

இதில் 50,000 மேற்பட்ட மக்கள் கலந்து உணர்வுபூர்வ ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் கொள்கை மீதான பற்றுதலுக்கு ஆதரவளித்த அனைத்துத் தோழர்கட்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – சுவிஸ் கிளை.