Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பத்தாவது தேசிய மகாநாடு இன்று (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவிலடி தனியார் விடுதியில் தோழர் ஆனந்தி அரங்கில் இடம்பெற்றது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பத்தாவது தேசிய மகாநாடு இன்று (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவிலடி தனியார் விடுதியில் தோழர் ஆனந்தி அரங்கில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மௌன அஞ்சலி இடம்பெற்றது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பத்தாவது பொதுச்சபைக் கூட்டம் 05.08.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 06.08.2022 சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணம் இணுவில் தனியார் விடுதியில் இடம்பெற்றது. Read more

ஜோசப் ஸ்டாலின் கைது-

Posted by plotenewseditor on 3 August 2022
Posted in செய்திகள் 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மே மாதம் 28 ஆம் திகதி, கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர். Read more

இலங்கையின் அரசியல் மாற்றம், வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அமைதியான, ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய அனைத்துத் தரப்புகளையும், ஊக்குவிப்பதாக  இங்கிலாந்தின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர அமண்டா மில்லிங் தெரிவித்துள்ளார். Read more

இந்த வருட இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, Read more

மக்கள் போராட்டம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் தகவல்களை பகிர்ந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. வீசா நிபந்தனைகளை மீறியமைக்காக பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இ.தொ.காவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதில், இ.தொ கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

வௌ்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடுவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால்  வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தை உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read more