நான்கு இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி, வெகுசன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சுகாதாரம் ஆகிய இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்களே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சின் கீழ், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை பெட்ரோலிய மொத்த விற்பனை முனையம், திருகோணமலை பெட்ரோலிய முனையம், இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தபால் திணைக்களம், அரசாங்க அச்சுத் திணைக்களம் மற்றும் இலங்கை அச்சகம் என்பன இராஜாங்க வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுகாதார இராஜாங்க அமைச்சின் கீழ், தனியார் மருத்துவ சபை, 1990 சுவசெரிய அறக்கட்டளை, புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை ஆகியன கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன், சுகாதார இராஜாங்க அமைச்சின் கீழ்  ஆயுர்வேத திணைக்களம், ஆயுர்வேத மருத்துவ சபை, இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் ஆகியன கொண்டுவரப்பட்டு, புதிய வர்த்தமானி அறிவித்தல் வௌயிடப்பட்டுள்ளது.