பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக போக்குரவத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், கட்டணத்தைக் குறைப்பதாக தெரிவித்திருந்தார். Read more
இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் எயார்லைஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
நந்தாவில் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நல்லூர் பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் ப.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
உத்தேச வருமான வரி மற்றும் ஏனைய வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, அவ்வாறு செய்யத் தவறினால் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் மருந்து பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் சுகாதாரச் சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.
Eco Tablet எனப்படும் எரிபொருளுடன் கலக்கப்படும் மாத்திரை தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், தனது டுவிட்டர் செய்தியில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வரவிருக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதே அவரது விஜயத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.