ஜேர்மனியில் இன்று (03-03-2023)தனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் பரத்ராஜ் என்பவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளையின் ஊடாக மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் வசிக்கும் கழகத் தோழர் ச.நித்தியகுமார் என்பவர் சுயதொழிலாக மேற்கொள்ளும் வெற்றிலை செய்கையை மேம்படுத்துவதற்காக நாற்பதாயிரம் ரூபாய்(40,000/-) நிதி உதவியை கழகத்தின் சமுக மேம்பாட்டுப்பிரிவுக்கு வழங்கியுள்ளார். இவ் உதவி 03-03-2023ம் திகதி கழகத்தின் சமுக மேம்பாட்டுப்பிரிவு பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் ச.நித்தியகுமாரிடம் கையளிக்கப்பட்டது.