வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் ஒலுமடுப் பிரதேசத்தினை அண்டிய வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமையை கண்டித்து நாளை மறுதினம் வியாழக்கிழமை (30.03.2023) காலை 9.30மணியளவில் வவுனியா கந்தசாமி கோயில் தொடக்கம் வவுனியா மாவட்ட செயலகம் வரையிலும் இடம்பெறவுள்ள கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் விடுத்துள்ள பகிரங்க அழைப்பிற்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்குகிறோம்.

புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாகிய ( தமிழ் தேசிய கூட்டமைப்பு) நாம்,
கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்
மற்றும் சமயத் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகத்தினர், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கட்சி வேறுபாடின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும், அழைத்து நிற்கின்றோம்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
28.03.2023