வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் ஒலுமடுப் பிரதேசத்தினை அண்டிய வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமையை கண்டித்து நாளை வியாழக்கிழமை (30.03.2023) வவுனியாவில் இடம்பெறவுள்ள கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முழுமையான ஆதரவினை வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் இன்றையதினம் திருகோணமலையில் மேற்படி கட்சிகள் ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தன.
யாழ். சுன்னாகம் பரித்திகலட்டியைப் பிறப்பிடமாகவும் வவுனியா 30/41F முதலாம் ஒழுங்கை, கோவில்வீதி, குருமண்காட்டை வதிவிடமாகவும் கொண்டவரும், வவுனியா Safety Credit, Safety Guncare, Safety Mobile நிறுவனங்களின் உரிமையாளர் தோழர் மயூரன் அவர்களின் பாசமிகு தந்தையுமான திரு செல்வரெட்ணம் மகேந்திரராஜா அவர்கள் இன்று (29.03.2023) புதன்கிழமை இயற்கையெய்தினார்.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்படவுள்ள இலங்கை – தாய்லாந்து இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 27 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது.
முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (30) முதல் குறைக்கப்படவுள்ளது. போக்குவரத்துக் கட்டணத்தை இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து 80 ரூபா வரை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார். மீட்டர் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் அறவிடும் முச்சக்கர வண்டிகள் பல்வேறு வகையான கட்டணங்களை அறவிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.