கிளிநொச்சி – ஆனையிறவில் போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 250 கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 27 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

24 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் 26 வயதான மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக யாழ். மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.