அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். பொருளாதாரத்தில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள இலக்கை அடைந்தால் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை அடைந்ததன் பின்னர் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறினார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.