Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக கிளிநொச்சி கோணாவில் கிழக்கைச் சேர்ந்த திருமதி கோ.பிரசாந்தினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கியுள்ளார்.

Read more

இன்று (01.06.2023) காலை 8.30மணியளவில் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுடன் மேற்படி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் தோழர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், மத்தியகுழு உறுப்பினர்களான தோழர்கள் மோகன், சிவம், மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன், மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி,

Read more

20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ஆவது ஆண்டு நினைவுதினம், இன்றாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார்.

Read more

01.06.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் நாதன் (சிதம்பரநாதன்- பண்ணாகம்) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

மலர்வு 1958-03-15
உதிர்வு 2023-05-31
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வாழ்விடமாகவும் கொண்டவரும், கழகத்தின் நீண்ட கால உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினருமான தோழர் கிருபா மாஸ்டர் (கந்தையா கிருபைராஜா) அவர்கள் நேற்றிரவு (31.05.2023) சுகயீனம் காரணமாக மரணமெய்திய செய்தியை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

Read more