Header image alt text

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 118 துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாயகக் குரல்

Posted by plotenewseditor on 17 June 2023
Posted in செய்திகள் 

தாயகக் குரல் –
ஜனாதிபதி ரணில் நாட்டுக்கு நல்ல தலைவர் – நாம் நம்பலாமா? அவர்தன்னும் நிரூபிப்பாரா?
தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசமான முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையைச் சுற்றியுள்ள நிலங்கள் வெளியாருக்கு வழங்கப்படமாட்டாது எ ஜனாதிபதியின் செயலாளர் திரு. சமன் ஏக்கநாயக்க அவர்கள், பௌத்த மேலாதிக்கச் சிந்தனையாளர் எல்லாவல மேதானந்த தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கூடவே, குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள வயல் நிலங்கள் பற்றிய விளக்கத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகப் பிரிவினால் தெரிவிக்கபபட்டுள்ளது.

Read more