Header image alt text

23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்யும் யோசனை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்  ஜனக வக்கும்புர கூறுகின்றார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பான யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான யோசனை பாராளுமன்ற தெரிவுக் குழுக்களினூடாக முன்வைக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர்  ஜனக வக்கும்புர  தெரிவிக்கின்றார். Read more

ரசாங்கத்தின் நலன்புரி திட்டத்திற்கு பயனாளர்கள் தெரிவு செய்யப்படுவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக பயனாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அரசாங்கத்தின் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் பயன் பெறும் பயனாளர்கள் பற்றிய ஆவணங்கள் தற்போது வௌிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை காலமும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்று வந்த பயனாளர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. ஸ்திரமற்ற பொருளாதார நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 04 பிரிவுகளின் கீழ்  அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் வௌியிடப்பட்டிருந்தன. Read more