Header image alt text

28.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் ஆனந்தன் (சுப்பையா அருளானந்தம் – முகத்தான்குளம்) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் ….

நிதி அமைச்சு முன்வைத்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை இன்று பிற்பகல் ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கடன் மறுசீரமைப்புத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த திட்டத்தை அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. Read more

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட  பிரேரணை, சட்டமூலமாக  வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ளடகப்பட்டுள்ள சில சரத்துகளை திருத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. Read more