Header image alt text

மலர்வு 13.08.1939
உதிர்வு 06.06.2023
யாழ். நாதோலை இளவாளையைப் பிறப்பிடமாகவும். மயிலிட்டியை வாழ்விடமாகவும், சிறுவிளான் இளவாளையை(அளவெட்டி) தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளை நிர்வாக உறுப்பினர் தோழர் சந்திரன் (கந்தசாமி சந்திரன்) அவர்களின் அன்பு மாமனாரும், திருமதி சந்திரன் நவஜோதி அவர்களின் அன்புத் தந்தையுமாகிய சின்னையா வாமதேவன் அவர்கள் 06.06.2023 செவ்வாய்க்கிழமை காலமானார்.

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதிக்கு மக்களின் கருத்தை நசுக்குவதற்கு இடமளியோம் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து’ என்ற தொனிப்பொருளில் இன்று மாலை 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. Read more

உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். Read more

ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) நிறுவனத்துடன் இலங்கை கையெழுத்திட்டது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more