ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி பெரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பெரிஸ் கிளப் முன்னதாக அறிவித்திருந்தது. Read more
அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டால் 06 மாதங்களுக்குள் தற்போது ஔிபரப்பு சேவையை முன்னெடுக்கும் 33 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்தாகுமென ஞாயிறு மவ்பிம பத்திரிகை இன்று(11) செய்தி வௌியிட்டுள்ளது. நாட்டில் தற்போது உள்ள 33 ஔிபரப்பு சேவை நிறுவனங்கள், 1966 ஆண்டின் 37 ஆம் இலக்க வானொலி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழும் 1982 ஆண்டின் 06 ஆம் இலக்க ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழும் அனுமதிப்பத்திரம் பெற்று இயங்குகின்றன.