பொறுப்புக்கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில பிரேரணைகளை கவலையளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் (Volker Turk) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.