பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் பாரிஸில் நடத்துகின்ற சர்வதேச நிதி மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள், சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். Read more
வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.