இந்தியாவின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற விஜயதாச ராஜபக்ஷ செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். Read more
ஸ்ரீலங்கன் விமான சேவையின் 70க்கும் மேற்பட்ட விமானிகள், போதிய வேதனம் இன்மையினால் ஏற்கனவே பணியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் குழுவொன்று விமானம் தாமதமானதால் அந்த வாய்ப்பை இழந்த சம்பவம் தொடர்பில் அந்த சங்கத்தினர் அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) புனரமைக்கப்பட்ட வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று (25,06,2023) பிற்பகல் 12.00 மணியளவில் கட்சியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.