பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read more
நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழி கடவுச்சீட்டு முறைமையின் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேரடியாக கடவுச்சீட்டை பெற செல்பவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்தை பெறும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் பதிவாகியிருந்தது.
19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் இன்று(19) ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நாளை மறுதினம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Turk வாய்மொழி மூல உரை நிகழ்த்தவுள்ளார்.
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹித்த போகொல்லாகம இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இன் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. ஏற்கனவே நடந்த கூட்டங்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் யாப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.
18.06.2021ல் கனடாவில் மரணித்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள்….
X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இழப்பீட்டுத் தொகை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக குழுவொன்று அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 118 துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.