Header image alt text

07.06.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர் ராஜா (செல்வரட்ணம் கனகசபை – ஒட்டுசுட்டான்) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த இழுவை படகு நெடுந்தீவின் இறங்குதுறைக்கு அருகில் கடலில் ஏற்பட்ட அலையின் காரணமாக படகின் அடிப்பகுதி தரைப்பகுதியில் மோதியுள்ளது. Read more

 இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10500க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் 100 வது விமானச் சேவை இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. Read more

இந்திய பயணிகள் கப்பலான MS Empress தனது முதல் பயணத்தை ஆரம்பித்து 1600 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி கப்பல் நிறுவனமான Cordelia Cruises உடன் ஏற்படுத்தப்பட்ட புதிய கூட்டிணைவின்படி, இந்த கப்பல் நேற்று (05) பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது. Read more

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களது 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உரும்பிராயில் அமைந்துள்ள சிவகுமாரன் நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்றது. Read more

பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.

Read more

05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…
முன்னாள் பிரதி சபாநாயகரும் உடுப்பிட்டித் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நெல்லியடி நகரில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் உருவச்சிலையடியில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

Read more

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் 908 வீடுகள் உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. Read more

2024 ஜனாதிபதி தேர்தல்-

Posted by plotenewseditor on 4 June 2023
Posted in செய்திகள் 

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான முதல் கட்ட சந்திப்பு பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த. திங்கட்கிழமை இடம்பெற்றது.