அதிகரித்திருக்கும் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் – உரும்பிராய், செல்வபுரம் பகுதி மக்கள் இன்று (01) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செல்வபுரம் பிரதேச மக்களால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி, பலாலி வீதியை சென்றடைந்து, வேம்படி வீதியூடாக மீண்டும் செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. Read more
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது. கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.
01.09.2015இல் திருகோணமலையில் மரணித்த மூதூர் கடற்கரைச்சேனையைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்த்திடல், தம்பலகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கார்த்திகேசு திருநாவுக்கரசு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று……