Header image alt text

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி நேற்று (05) வௌியிட்ட நிகழ்ச்சியில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று வலியுறுத்தியுள்ளார். தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள், இதுவரை சரியாக ஆராயப்படாத உண்மைகள் தொடர்பாக பக்கசார்பற்ற, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பரந்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். Read more

06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார். Read more