Header image alt text

வவுனியா – நெலுக்குளம், ராசேந்திரகுளம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நெலுக்குளம் – பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வருடமும் 11 மாதங்களுமான பெண் குழந்தையின் சடலமே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சில குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டிற்கு அருகிலிருந்த நீர்த்தாங்கியில் வீழ்ந்து கடந்த 25 ஆம் திகதி குறித்த குழந்தை உயிரிழந்தது. Read more

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037ஆக அதிகரித்துள்ளது. மேலும்  1,204 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொராக்கோவில் நேற்று நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 19 நிமிடங்களுக்கு பின்னர் 4.9 மெக்னிட்யூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. Read more

மலர்வு 1940.02.14
உதிர்வு 2023.09.07
மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவரும், தோழர்கள் ஆஷா (குணரத்தினம்), சுரேஸ் (கனகலிங்கம்) ஆகியோரின் அன்புத் தாயாருமான திருமதி கதிர்காமத்தம்பி அருளம்மா அவர்கள் நேற்று (07.09..2023) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

Read more

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் டானியல் வூட் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் செய்துள்ளார். அவர் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை பார்வையிட்யிட்டுள்ளார். இதன்போது, நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் நூல்கள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

வெற்றிடங்களை நிரப்புவதற்காக 4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். Read more

07.09.1987இல் தம்பனையில் மரணித்த தோழர்கள் ராமு (சா.அகிலன் – ஈச்சந்தீவு), தமிழ்ச்செல்வன்( சுழிபுரம்),ஹென்றி ( முருகானந்தம் – பாலையூற்று), வேந்தன்( சுழிபுரம்), டியூக் (ஹரிச்சந்திரன்-கன்னியா), மனோரஞ்சன்(கனகசுந்தரம்), ஞானராஜ் ( பன்குளம்), கரன்( மட்டக்களப்பு), குமார் ( தீவுப்பகுதி), ரகுன் ( யாழ்நகர்), ரஞ்சன் (திருகோணமலை),சோதிராஜ்(மட்டக்களப்பு), ஜீவா (மட்டக்களப்பு) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவுதாள் இன்று

மலர்வு. – 20.06.1965
உதிர்வு – 06.09.2023
திருகோணமலை புல்மோட்டையைப் பிறப்பிடமாகவும் வவுனியா கல்நாட்டினகுளம் பழைய குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் மாணிக்கம் அவர்களின் இளைய சகோதரருமான திரு. நாகன் இரத்தினசிங்கம் அவர்கள் இன்று 06.09.2023 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் இடது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து யாழ். நீதவான் A.A.ஆனந்தராசா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறுமியின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. Read more

2022 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பற்கான வழிகாட்டல் கையேடு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. Read more

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழகம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சு இந்த பணியை நேரடியாக மேற்கொள்ளவுள்ளது. இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு இரு வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தமிழக கடல் சார் வாரியம் தீர்மானித்துள்ளது. Read more