ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நிலையிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது. அதன்படி அவர்கள் இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.