2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் ​மே மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் மீதான மீள் பரிசீலனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், விசேட தேவையுடைய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. பரீட்சையில் 3,42,883 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.