25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள்
25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள்
மலர்வு : 1940.06.07Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள்
ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மீண்டும் ஈரான் நோக்கி புறப்பட்டார். ஈரானுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். நேற்று உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்தார். இதேவேளை ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள்
இரா.சம்பந்தனுக்கு வேதனத்துடன் 3 மாதம் விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருப்பதால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆதரித்துள்ளார்.
Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள்
இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஈரானிய ஜனாதிபதியின் வலுவான நம்பிக்கை.Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள்
பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர். பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள்
அமரர் முத்துவேல் கண்மணி அவர்கள்
மலர்வு : 1940.06.07
உதிர்வு : 2024.04.24
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகக் கொண்டவரும், தோழர் சுதா (மு.நேசராசா) அவர்களின் அன்புத்தாயாருமான திருமதி முத்துவேல் கண்மணி அவர்கள் நேற்று (24.04.2024) காலமானார். Read more