டிரான் அலஸை உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. Read more
அமரர் தோழர் பவுண் (இராஜநாயகம் சிவகுமாரன்) அவர்கள்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இப்போது உள்ள யாப்பின் படி சத்தியலிங்கம் பொதுச்செயலாளர் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், துரைராசசிங்கம் பதவி விலகியதால் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமானது. யாப்பின் படி வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கமைய சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பதில் பொதுச்செயலாளராக சுமந்திரன் இருக்கிறார். ஆனால் எவ்வாறான சந்தர்ப்பங்களில் பதில் பொதுச்செயலாளர் தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன.
ஜப்பானின் (Japan) வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yoko Kamikawa) மிக விரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர், எதிர்வரும் மே மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
நீண்ட காலமாக இல.01, 03ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ஆம் (01.05.2024) திகதியிலிருந்து இல.42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் (42,Temple Road, Jaffna) முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது பணியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து மற்றும் காகிதாதிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி குறித்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என பல வருடங்களாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடந்த ஒக்டோபர் மாதம் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார். 2000ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது.