Apr 24
30
Posted by plotenewseditor on 30 April 2024
Posted in செய்திகள்

‘சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரள்வோம்’ எனும் அறைகூவலுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) தனது தொழிலாளர் தினக் கூட்டத்தை, நாளை, மானிப்பாயில் அமைந்துள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடாத்தவுள்ளது. கூட்டணியுடன் இணைந்து பயணிக்கின்ற உழைக்கும் பெண்கள் அமைப்பின் அனுசரணையில், மேலும் பல தொழிற்சங்க அமைப்புகளும் இணைந்து, தொழிற்சங்க, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இத் தொழிலாளர் தின நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.