Header image alt text

IMG_0245aஇன்று (01.05.2017) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள், பல்வேறு நாட்டு விடுதலை அமைப்புகள் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளொட்) கலந்து சிறப்பித்திருந்தது. Read more

dfgfdgஅம்பாறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. குறித்த மே தின கூட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக சென்று மே தின கூட்டம் நடைபெறும் மைதானத்தை அடைந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர். Read more

retrtrதந்தை செல்வா நற்பணி மன்றத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவு தினம் இம்முறையும் கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மேற்படி நினைவு தின அனுஷ்டிப்பு நேற்று (30.04.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணியளவில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் தந்தை செல்வா நற்பணி மன்றத் தலைவர் ஏ.சந்தனம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மொழிகள் அமுலாக்கல் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும், விசேட அதிதியாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் கே.ரி.குருசாமி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Read more