வலி.மேற்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சூறாவளிப் பிரசாரம்-

2013-09-08 12.37.07 (2)யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்டாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வலி.மேற்கு பிரதேச சபைத் தலைவர் நாகபூசணி ஐங்கரன், வலி.மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் சிவரஞ்சன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்குக் கேட்டு இப்பிரதேசங்கள் எல்லாவற்றிலும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கானை மாவடி சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை மாவடி கிராம அபிவிருத்தி சங்கம், பொன்னாலைக் கோவிலடி, பொன்னாலை காட்டுப்புலம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொடர்ந்து தேர்தல் கருத்தரங்குளையும், கலந்துரையாடல்களையும் இவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் ஆதரவாளர்களும், பெருமளவு பொதுமக்களும் கூட்டமைப்புக்கு வாக்குக் கேட்கும் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

2013-09-08 11.19.25~12013-09-08 11.24.122013-09-08 11.51.002013-09-08 11.24.352013-09-08 10.34.22