500 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக செலவாகக்கூடும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இது தொடர்பில் அரசாங்கத்துக்கு தௌிவுபடுத்தப்படும் என ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.