பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.