18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செயன்முறைகளை நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் உலகின் சில நாடுகள் சிறந்த பிரதிபலன்களை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.