அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித்  தலைவர்களின் சந்திப்பொன்று நாளை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் மே தின நிகழ்வுகள்  தொடர்பில் இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதே​வேளை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின்  உறுப்பினர்கள்களைச் சந்திக்கும் நிகழ்வும் நாளை மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.