சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் அனுசரணையில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு உதவி

swiss pungudutive ontriyam  anusaranai (31)swiss pungudutive ontriyam  anusaranai (18)swiss pungudutive ontriyam  anusaranai (28)swiss pungudutive ontriyam  anusaranai (30)swiss pungudutive ontriyam  anusaranai (26)swiss pungudutive ontriyam  anusaranai (23)

swiss pungudutive ontriyam  anusaranai (24)DSC06639DSC06637DSC06636DSC06635DSC06634DSC06633DSC06617புங்குடுதீவை பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும் சுவிஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வி. பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினரால் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையில் வவுனியா, விளக்குவைத்தகுளம் பகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதியவேலர் சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயம், றம்பைக்குளம் நடராஜா வித்தியாலயம், விளாத்திக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களே 01.06.2014 அன்று விளக்குவைத்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் இடம்பெயாந்து தற்போது மீள்குடியேறி 5 வருடங்கள் கடந்த நிலையிலும், தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் பல பிரச்சினைகளை பொருளாதார ரீதியில் எதிர்கொண்ட 52 குடும்பங்களின் 52 மாணவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவுமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வவுனியா கிளையைச் சேர்ந்த திரு.மு.கண்ணதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினருமான ஜோர்ஜ் வொசிங்டன், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், காண்டீபன், சதீஸ், மகிழங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சி.கோபாலசிங்கள், மகிழங்குளம் பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் கோ.சரஸ்வதி, மகிழங்குளம் சனசமூக நிலைய பொருளாளர் தி.சோதிநாதன், சமூக சேவையாளர் கேதீஸ் மற்றும் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.