18,845 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்கி வரும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் போனஸ் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பணிப்பாளர் சபை கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் மூன்று முறை போனஸ் வழங்குவதற்காக 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு மாத்திரம் மாதமொன்றுக்கு 25 -30 கோடி ரூபாய் செலவிடப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது