தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் விகாரைகளை புகுத்துவது சட்டவிரோதமான செயல் என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவிக்கின்றார். சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற பௌத்த பண்பாட்டு சின்னங்கள் தமிழ் மக்களின் உரிமைகளாகும். ஆனால் தற்போது புகுத்தப்படுகின்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.