முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2023) முற்பகல் யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், தோழர் தீபன்(சுவிஸ்), வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் க.தர்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.