காரைதீவில் மனித எச்சங்கள் மீட்பு-

அம்பாறையின் காரைதீவு, 8ஆம் பிரிவில் கடற்கரையையண்டிய வளவொன்றிலிருந்து இன்றுகாலை குப்பையைப் புதைப்பதற்கு குழி வெட்டியபோது மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிபேரலையின் பின்னர்; கரையொதுங்கிய பெரும்பாலான சடலங்கள் பரவலாக இப்பகுதிகளில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது சுனாமியின்போது பலியான உடலாயிருக்கலாமென கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.