Header image alt text

தமிழக அரசின் தீர்மானத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை-

20இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து விளக்கம் கேட்கும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மேற்படி மத்திய அரசின் மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது. ராஜீவ் கொலையாளிகள் விடுதலை முடிவு விஷயத்தில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, தமிழக அரசு அவர்களை விடுவிக்க கூடாது. 3 நாட்களில் 7 பேரையும் விடுவிக்க கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும். விடுதலை செய்ய முடிவு எடுத்தது குறித்து இரு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை விடுதலை செய்வது சட்டத்திற்கு முரணானது-இந்திய பிரதமர்-

manmohan sighrajiv gandhi (3)இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அனைத்து கொள்கைகளுக்கும் முரணான விடயமாக 7 பேரின் விடுதலை அமையுமென இந்திய பிரதமர் குறிப்பிட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ராஜிவ் காந்தியின் படுகொலையானது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பிரஜையையும் பாதிக்கும் விடயமென மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக தமது நடவடிக்கைகளை எந்தவொரு அரசாங்கமோ அல்லது கட்சியோ இலகுபடுத்த முடியாது எனவும் இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தனது பெற்றோரான முருகன் மற்றும் நளினிக்கு மன்னிப்பு வழங்குமாறு லண்டனின் உயிரியல் மருந்துவ துறையில் கல்விகற்கும் 22 வயதான ஹரித்திரா ஸ்ரீகரன், ராஜிவ் காந்தியின் புதல்வர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய இராணுவத்தளபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

indian army (1)indian army (3)இந்தியாவின் தெற்கு மண்டல இராணுவக் கட்டளைத்தளபதி லெப்ரினன் ஜென்ரல் அசோக் சிங் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். இன்றுகாலை பலாலி படைத்தலைமையகத்தில் அவர் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபேராவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து காலை 11 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இதேவேளை இந்திய தெற்கு இராணுவத் கட்டளைத்தளபதி லெப்டினல் ஜெனரல் அசோக் சிங் மற்றும் துணை இராணுவ கட்டளைத் தளபதி ஆகியோர் பலாலியிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

251 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு-

cafeதேர்தல் சட்ட விதிமுறை மீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 251 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் குறித்து 244 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 7முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வருமாறு பான் கீ மூனுக்கு அழைப்பு-

unnamed6எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும அண்மையில் பான் கீ மூனை சந்தித்தபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் பேரவை அமர்வுகளில் பங்கேற்குமாறு அமைச்சர் அழப்பெரும, பான் கீ மூனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமர்வுகளில் பான் கீ மூன் பங்கேற்பாரா அல்லது தனது பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பாரா என்பது இன்னமும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் பாலித கொஹன ஆகியோர் கடந்த 18ம் திகதி பான் கீ மூனை சந்தித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போலி வேட்பு மனுக்கள் குறித்து விசாரணை-

desapiryaதெற்கு மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் காணப்படும் போலி தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் உள்ள நபர்களின் பெயர் முகவரிகள் போலியானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது குறித்து ஆராய்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளோம். பாதுகாப்பு பிரச்சினை காணப்படும் அரசியல் கட்சிகள் அது குறித்து தனக்கு அறிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் தீர்மானம் நிராகரிப்பு-

northern-இலங்கையில் மூன்றாவது விமான நிலையத்தை நிர்மாணிக்கும் யோசனை இல்லை என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமானசேவை நடத்தப்பட வேண்டும் என்று வட மாகாண சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சிவில் விமான சேவையொன்றை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மாகாணசபைக்கு இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரடியனாறு விபத்தில் 30 பேர் படுகாயம்-

karadiyanaru accidentமட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு சந்தியில் இன்றுகாலை 6.30அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர்கள் உட்பட சுமார் 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கரடியனாறு வைத்தியசாலையின் வைத்தியர் கே. சுகுமார் தெரிவித்துள்ளார்.பெரியபுல்லுமலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பயணிகள் பஸ்ஸும் செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த ரிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்களில் Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜோன் ரங்கின் சந்திப்பு-

download (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கினை நேற்றையதினம்  சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.  நேற்று  பகல் யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கின் தற்போதைய நிலைமைகள், வட மாகாணசபையின் செயற்பாடுகள், வடக்கு மக்களின் தேவைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமிர்தலிங்கம் பகீதரன் – ஜனாதிபதி சந்திப்பு 

1aa(43)தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். கோடூரமான பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பாராட்டிய பகீர்தரன்  நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் இனம்,மதம் மற்றும் மாகாண பேதமின்றி முன்னெடுப்பதனையிட்டு ஜனாதிபதிக்கு அவர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல் எதிர்ப்பு.

imagesCAWZ1WWKஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டுப்பட்டு தண்டனை குறைக்கப்பட்டிருந்த 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராகுலின் தந்தையான ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் 23ஆண்டுகாலம் சிறையில் கழித்ததால் அவர்களது விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இன்று தமிழக அரசு பேரறிவாளன் மற்றும் ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவிக்க 3 நாள் கெடுவை மத்திய அரசுக்கும் தமிழக அரசு விதித்துள்ளது. இது குறித்து அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி, நான் தூக்கு தண்டனைக்கு எதிரானவன். என் தந்தை இந்த நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர். ஒரு முன்னாள் பிரதமரை கொன்றவர்களே விடுதலையானால் இந்த நாட்டில் சாமானியருக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்றார்.

ரஜிவ் காந்தி கொலை தொடர்பிலானோரை விடுவிக்க நடவடிக்கை-

rajiv gandhi killingமுன்னாள் இந்தியப் பிரதமர் ரஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றுகாலை நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர்மீதான தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று இரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த மூவரையும் உடனடியாக விடுதலைசெய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு நேரடி விமானசேவை: வடமாகாண சபையில் தீர்மானம்.

northern-வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போது பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய பிரேரணை தீர்மானம்  ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது.
 வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும். காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையினையே சிவாஜிலிங்கம் சபையில் சமர்ப்பித்தார்.

ஜெனீவாவிற்கு ஆதரவு திரட்ட அரச குழு தென்னாபிரிக்கா பயணம்-

srilankaஜெனீவா மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக அரசாங்க உயர்மட்டக் குழு தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அரசாங்கத்தின் உயருதிகாரிகள் குழு தென்னாபிரிக்கா செல்கிறது. அமைச்சரும் ஆளும்கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா இக் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி. சஜின் டி வாஸ், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோர் இக்குழுவில் செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வேட்பாளர் விபரப்பட்டியல் 04ம் திகதி விநியோகம்-

elections_secretariat_68தென் மற்றும் மேல்மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான உத்தியோகபூர்வ வேட்பாளர் விபரப் பட்டியல்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதுதவிர, வாக்கு அட்டைகளை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ள நிலையில், மார்ச் 16ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் செயலகத்திலுள்ள முறைப்பாட்டு பிரிவிற்கு 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் தூதுவர் இராணுவத்தளபதி சந்திப்பு-

japan thoothuvarஇலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹிதோ ஹொபோ மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்தி;ப்பில், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாயந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் செலுத்தும் பங்களிப்பு தொடர்பில் இராணுவத்தளபதி, ஜப்பான் தூதுவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட தூதுவர் நியமனம்-

cyril rambosha south africaஇலங்கையில் தனது நல்லிணக்க செயற்பாட்டை ஒரு படி மேலே கொண்டுசொல்லும் வகையில் நல்லிணக்க செயன்முறை தொடர்பாக இலங்கையுடன் செயற்படுவதற்கான விசேட தூதுவராக சிரில் றம்போஷவை தென்னாபிரிக்கா நியமித்துள்ளதாக தெரியவருகின்றது. வெள்ளையர் அரசாங்கத்துடன் 1991ஆம் ஆண்டு நிறப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்த பேச்சுவார்;த்தையில் ஆபிரிக்க தூதுக்குழுவிற்கு சிரில் றம்போஷ தலைமை தாங்கியிருந்தார். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் தென்னாபிரிக்காவிற்கு இன்று விஜயம் செய்யும் இலங்கை தூதுக்குழுவினர் எதிர்வரும் 21ஆம் திகதிவரை அங்கு தங்கியிருந்து பல உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை குறிப்பாக தென் ஆபிரிக்கா உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி முக்கிய கவனம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு-

c4 tnt explosiveயாழ். பாஷையூரிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றுமாலை 72 கிலோகிராம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் சந்தேகத்தின்பேரில் பாஷையூர் பகுதியினைச் சேர்ந்த ஒருவரை இன்று அதிகாலை ஓமந்தையில் வைத்து ஓமந்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாஷையூர் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சி-4 வெடிபொருட்கள் 16 கிலோ மற்றும் ரி.என்.ரி. வெடிமருந்துக் குச்சிகள் 46 உள்ளடங்கலாக மொத்தம் 72 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. வெடிமருந்துகளை வைத்திருந்த இருவர் தப்பித்து நாச்சிக்குடாவிற்குச் சென்றுவிட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்தது. இதனால் அந்நபர்களின் குடும்பத்தினர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். தொடர்ந்து, யாழ். பொலிஸாரினால் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு அடையாள அட்டை இல்லாமல் வருபவர்களை கைதுசெய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய இன்று அதிகாலை அடையாள அட்டை இல்லாமல் ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகச் செல்ல முயன்ற பாஷையூரினைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கி தொகுதி அன்பளிப்பு-

unnamedவவுனியா கோவில்குளம் இளைஞர் கழக ஏற்பாட்டில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கித் தொகுதி இன்றையதினம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும், புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் ஸ்தாபகரின் மகளான செல்வி பூஜாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இந்த ஒலிபெருக்கித் தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி கே.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலர் திரு எஸ்.தவபாலன் பாடசாலை ஆசிரியர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளையைச் சேர்ந்தவரும், கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகருமான திரு எம்.கண்ணதாசன், கோவில்குளம் இளைஞர் கழக செயலர் ஜனார்த்தனன், கழக இணைப்பாளர் காண்டீபன், கழக தொழில்நுட்ப இயக்குனர் சதீஸ், இளைஞர் கழக உறுப்பினர்களான சந்திரன், சுகந்தன் ஆகியோரும், பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.  Read more

ரஜீவ் கொலை, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம்-

rajiv gandhi killingமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்றுகாலை தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னர், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் கருணை மனுவிற்கான பெறுபேற்றினை வழங்குவதற்கு பல வருடங்கள் விரயமாக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபை முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களின் கல்வித்தகைமை தொடர்பில் தீர்மானம்

npc2_CIவடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கல்வித்தகைமை கட்டாயம் அல்ல என பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபை முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்காக முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களை நியமிப்பதற்கு கல்வித்தகைமை கட்டாயப்படுத்தாது விரைவில் நியமனங்களை பிரதம செயலர் வழங்க வேண்டும் என அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தினால் சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 14.10.2013 அன்று பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு முகாமைத்து உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் வழங்கப்படும்போது க.பொ.த சாதாரணம் மற்றும் க.பொ.த உயர்தம் ஆகிய கல்வி தகைமைகள் பார்க்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான கல்வித் தகைமைகள் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கும் குறித்த சட்டம் இல்லை என்பதாலும் விரைவில் அவர்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை மனித புதைகுழி தொடர்பில் ஆய்வு-

trincomalee_mass_graveதிருகோணமலை நகர சபை கட்டத்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான ஆய்வுகள் இன்று இடம்பெறுவதாக கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் மனிதர்களுடையதா? என்பதைக் கண்டறிவதற்காக கொழும்பிற்கு குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். திருமலை நகரசபைக் கட்டடத்திற்கு அருகில் கிணறு வெட்டியபோது, எலும்புக்கூடுகள் சில கடந்த 12ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, திருமலை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு-

imagesயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக செயற்பட்ட திரு மகாலிங்கம் அவர்கள் கயானா நாட்டிற்கான தூதுவராக மாற்றம் பெற்றுச் செல்லுகின்ற நிலையில் அவர் தமிழ் மக்களுக்காற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்து வல்p மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 13ஆம் திகதி வரகக (13.02.2014) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், 08.02.2014 திகதிய உதயன் பத்திரிகை வாயிலாக தாங்கள் கயானா நாட்டிற்கான தூதராக மாற்றம் அடைந்து செல்லும் செய்தியினை அவதானித்தேன். தாங்கள் இது வரைகாலமும் தமிழ் மக்களுக்காற்றிய மிக உயரிய சேவை தொடர்பில் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் மூன்று மண்டையோடுகள் மீட்பு-

thiruketheeswaram manitha puthaikuli (3)மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் மூன்று மண்டையோடுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இதன்படி மேற்படி மனித புதைகுழியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளது. மனித புதைகுழியில் இன்றைய நாளுக்குரிய அகழ்வுப் பணிகள் இன்று காலைமுதல் மாலைவரை இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அனர்த்தம்-

australiaஅவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பபுவா நியுகியா தடுப்பு முகாமில் ஏற்பட்ட அனர்த்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக ஒருவர் கொல்லபட்டதுடன் மேலும் 77பேர் காயமடைந்துள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொறில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 13பேர் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பு முகாமிலிருந்து அகதிகள் பலவந்தமாக வெளியேறிய நிலையிலேயே மோதல் ஆரம்பமானதாகவும் கூறப்படுகிறது. மேற்படி முகாம் உட்பட சில முகாம்களில், அகதி அந்தஸ்து கோருபவர்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என ஐ.நா சபை குற்றம் சுமத்திய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால்மூல வாக்களிப்பிற்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி-

anjal vaakkalippu 1மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு 1,26,796 பேர் தகுதிபெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் 63,834பேர் மேல் மாகாணத்தில் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார். அத்துடன் தென் மாகாணத்தில் 62,962பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தலில் தபால்மூல வாக்கெடுப்பு மார்ச் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அமைச்சர் பீரிஸ் தலைமையில் மஹிந்த சமரசிங்கவும் ஜெனீவா பயணம்-

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்கவும் இடம்பெற்றுள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கான சத்துணவு தொடர்பில் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் கடிதம்-

Valikamam_West_Divisional_Councilயாழ். வலி மேற்கு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்குதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், கல்வியமைச்சர் கௌரவ பந்துள குணவர்த்தன அவர்களுக்கு நேற்று (17.02.2014) கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், பேருமதிப்புடையீர் மேற்படி விடயம் தொடர்பில் குறிப்பிட்ட துறைசார் கௌரவ அமைச்சர் என்ற வகையில் பின்வரும் விடயங்களை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். Read more

கட்டைவேலி மெதடிஸ்த மிஷன் பாடசாலை மெய் வல்லுநர் போட்டி-

kattaiveli school 16.02 (14)யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி திரு. பொன்னையா. முகாமைக்குரு கட்டைவேலி சேகரம், அருட்திரு செ.பிரின்ஸன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பாடசாலையின் அதிபர் திரு. புஷ்பாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், கிராமப் பாடசாலை என்று இப்பாடசாலையை புறக்கணித்து, தமது பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் சேர்க்க வேண்டுமென்று பெற்றோர்கள் நினைக்காமல் தமது பிள்ளைகளை இத்தகைய பாடசாலைகளில் சேர்ப்பதன் மூலம்தான் பாடசாலையும் முன்னேறும், மாணவர்களும் முன்னேறுவார்கள். எங்களுடைய சமுதாயத்தின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலே தான் தங்கியிருக்கின்றது. ஏனைய எல்லா வளர்ச்சிகளைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி கூடினால்தான் சமுதாயம் முன்னேறும். எனவே மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும், நலன் விரும்பிகளும் மகிழ்ச்சியுறும் வகையில் தங்களுடைய கல்வியிலே மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

kattaiveli school 16.02 (12)kattaiveli school 16.02 (15)kattaiveli school 16.02 (13)kattaiveli school 16.02 (8)kattaiveli school 16.02 (2)kattaiveli school 16.02 (4)kattaiveli school 16.02 (5)kattaiveli school 16.02 (6)kattaiveli school 16.02 (7)

போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: நவநீதம்பிள்ளை-

navneethamஇலங்கை தொடர்பான போர் குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார். இலங்கையில், 2009ல், புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. சரணடைவதற்குச் சென்ற ஏராளமான புலிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த போர் குற்றங்கள் குறித்து, தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையக தலைவர், நவநீதம்பிள்ளை, இலங்கை போர்க் குற்றம் குறித்து, சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக, அவர், 74 பக்க அறிக்கையையும் சமர்பித்துள்ளார்.

சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு மாலைதீவில் ஆரம்பம்-

SAARC VELIVIVAKARAசார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு மாலைத்தீவில் இன்று ஆரம்பமாகியுள்ளது.  இம்மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. வலய ஒத்துழைப்பு, உணவுப் பாதுகாப்பு, சூழல் மாற்றும், கல்வி மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பில் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு இராணுவ உதவி கிடைக்காது-நரேந்திர மோடி-

NARENDRAMODIதாம் பதவிக்கு வந்தால் இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவப்போவதில்லை என பாரதீய ஜனதாக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இந்த உறுதிமொழியை அவர் அண்மையில் தமிழகத்தில் வைத்து தமக்கு வழங்கியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை கோபாலசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் பதவியில் இருந்தபோது இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவிகளை வழங்கவில்லை. எனினும் அக் கொள்கையை காங்கிரஸ் அரசாங்கம் மீறிவிட்டது. இந்நிலையில் நரேந்திர மோடி பிரதமர் நிலைக்கு தெரிவுசெய்யப்பட்டால், அட்டல் பிஹாரி வாஜ்பாயின் கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும் என வை கோபாலசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக்கோரிக்கையை மோடி ஏற்றுக்கொண்டதாக வை கோபாலசாமி குறிப்பிட்டுள்ளார்.

சுழிபுரம் கசிப்பு உற்பத்தியை தடுக்குமாறு வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை-

Valikamam_West_Divisional_Councilயாழ். சுழிபுரம் குடாக்கனைப் பகுதியில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடந்த 13.02.2014 அன்று வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு உள்ளனர். இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பலருக்கும் அறியத்தந்தும் இதுவரை பொருத்தமான எதுவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. இப் பகுதியானது சனத்தொகை அதிகமாக உள்ள பகுதியாகும். இதேவேளை தொடர்ச்சியாக இப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வரும் நிலையில் சழூகவிரேத நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடிய வாய்ப்பான சூழல் இடம்பெறலாம். எனவே மேற்படி விடயம் தொடர்பில் எமது பிரதேச மக்களது நலனை கருத்திற்கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டு மக்களது நல்வாழ்வுக்கு உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கௌ;கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்வதற்கு தவறியோர்க்கு சந்தர்ப்பம்-

யாழ். வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர். வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன் கடந்த 5ஆம் திகதி சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பிரகாரம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியமர்வுக்கான உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட கேணல் ஈஸ்வரனுடன் கடந்த வெள்ளிக்கிழமை மீளவும் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கமைய மீள்குடியமர்வு தொடர்பிலான விவரங்களைத் திரட்டுவதற்காக பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுவரை பதிவு செய்யாதவர்களை நாளை மறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம் மற்றும் மருதனார் மடம் பாரதி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அராலி வடக்கு சில்வெஸ்டர் விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைபந்தாட்டப் போட்டி-

யாழ். அராலி வடக்கு சில்வெஸ்டர் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 15.02.2014 அன்று பிற்பகல் 4மணியளவில் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சங்கானை பிரதேச செயலர் திரு சோதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர் 

தடுப்பு முகாமிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்-

manus_island1அவுஸ்திரேலியா, மனூஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாமிலிருந்து சுமார் 35பேர் தப்பிச்சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி தப்பிச் சென்றபோதிலும் உடனடியாக அவர்களை மீண்டும் கைதுசெய்து தடுப்பு முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளாக அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளனர் இவர்களில் சிலர் காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைக்கவென மனூஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்புமுகாமிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமினதும் நவ்று தீவிலுள்ள முகாமினதும் நிலைமை குறித்து ஐ.நா சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் விமர்சனங்களை தெரிவித்துவருகின்றன. இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாம் பணியாளர்கள் சிலர்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கச்சத்தீவு விடயத்தஜல் மத்திய அரசின் நிலைப்பாடு மாறவேண்டுமென வலியுறுத்தல்-

KACHCHATIVEதமிழக மீனவர்கள் அனைத்து நலத்திட்டங்களையும் காப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் நாள்தோறும் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற அடிப்படை பிரச்சினையை மையமாகக் கொண்டே இரண்டு நாட்;டு மீனவர்களுக்கு இடையிலும் முறுகல் ஏற்பட்டு வருகிறது எனினும் இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் மாற்றுக்கருத்தை கொண்டிருக்கிறது இந்நிலையில் மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தமது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.

சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை கண்டுபிடிக்க நடவடிக்கை-

elections_secretariat_68சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட மட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் 30 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அத்தகைய பிரசார அலுவலகங்களை அகற்றுவதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

 தலைமை பொலிஸ் பரிசோதகர் சடலமாக மீட்பு-

police-cidமேல் மாகாண இரகசிய பொலிஸ் பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜூ. டப்ள்யூ. எம். சமரகோனின் சடலம் கொழும்பு, ஹோமாகம கொடகம பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் துப்பாக்கி சூட்டுக்காயம் காணப்படுவதுடன், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்றுகாலை கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஐ.ம.சு.மு தேர்தல் காரியாலயத்தின் மீது சூடு-

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் டி.வி.உபுலின் தேர்தல் காரியாலயத்தின் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக காரியாலயம் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் தனது தேர்தல் காரியாலயத்தை பெலியத்தை தங்காலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று திறந்துள்ளார். மேற்படி ஆயுதக் குழு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரங்களில் அரச வாகனங்கள் பயன்பாடு-

சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிற அரச வாகனங்களை கைப்பற்றுமாறு பொலீஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அரச வாகனங்கள் தொடர்ந்து பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் இதனை அறிவித்துள்ளார். இது தொடர்பில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் பொது செயலாளர்களுடனான சந்திப்பின்போதும், இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

காணாமற்போனோர் தொடர்பில் யாழில் சாட்சியங்கள் பதிவு-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று மூன்றாவது நாளாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில்  சாட்சியங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு-

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்பு எதிர்வரும் மார்ச் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. தபால் மூல வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய இடாப்பு தயாரிப்புகள் நிறைவுபெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

விமான பராமரிப்பு வளாகம் இடமாற்றம்-

தற்போது கட்டுநாயக்காவில் செயற்படும் விமான பராமரிப்பு வளாகத்தை அம்பாந்தோட்டையின் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்தில், போதிய அளவிலான இடவசதி உள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு தெரிவித்துள்ளார். இதற்கமைய அதிகளவிலான சர்வதேச விமானங்கள் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாற்றம் குறித்து சகல சர்வதேச விமான சேவைகளுக்கும் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்கு வரும் சரக்கு விமானங்களும் மத்தல விமான நிலையத்தில் இறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கப் பரிந்துரை-

இலங்கைக்கான மாலைதீவின் உயர்ஸ்தானிகராக அந்தநாட்டின் முன்னாள் அமைச்சர் சாஹியா சாரிரை நியமிக்க மாலைத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் பரிந்துரை செய்துள்ளார். அவரது பெயர் விரைவில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் அங்கீகாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கையும் காலத்தில், சாஹியா சாரீர் கல்வி மற்றும் சுகாதார அமைச்சராக பணியாற்றி இருந்தார். அவரது பெயர் உறுதிப்படுத்தப்பட்டால், தற்போது இலங்கைக்கான மாலைதீவின் உயர்ஸ்தானிகராக உள்ள ஹுசைன் சையிப், மாலைதீவுக்கு மீளழைக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகின்றது.

147 தேர்தல் முறைபாடுகள் பதிவு-

தெற்கு மற்றும் மேல் மாகாண சபைகளின் தேர்தல்களுடன் தொடர்புடைய 147 முறைபாகடுகள் இதுவரையில் தேர்தல்கள் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்துள்ளன. அவற்றில் 43 முறைபாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. கம்பஹாவில் 16 முறைபாடுகளும் களுத்துறையில் 24 முறைபாடுகளும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரிய தலைமையில் கெஸ்பேவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு பிரவேசித்த காவற்துறையினர், அங்கு வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பதாதைகளை கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத தேர்தல் அலுவலகங்களை அகற்ற நடவடிக்கை-

சட்டவிரோத தேர்தல் அலுவலகங்கள் அனைத்தும் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் அகற்றப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் அலுவலகங்களை சோதனையிடும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து சகல இடங்களுக்கும் பஸ் சேவை-

புகையிரத ஊழியாகளின் பணிப் பகிஸ்கரிப்பினைத் தொடர்ந்து பயணிகளின் வசதி கருத்தி வவுனியாவில் இருந்த அனைத்து இடங்களுக்கும் பஸ் வசதிகளை இன்றுமுதல் ஏற்பாடு செய்துள்ளதாக வவனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.எஸ் இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பஸ் சேவைகள் புகையிரத ஊழியாகளின் பணி பகிஸ்கரிப்பு நிறைவு பெறும்வரை இடம்பெறும் எனவும், வவுனியாவில் இருந்து தூர இடங்களுக்கான தனியார் பஸ் சேவை இடம்பெறும் இரண்டாம் குறுக்குத் தெருவில் பயணிகள் தமது பிரதேசங்களுக்கான பஸ் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கப்பலை காணாத ஓலுவில் துறைமுகம்

oluvil_harbourதென்கிழக்கு மக்களின் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக அமையும் என்ற எதிர்பார்ப்புகளுடன். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் ஓலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்ற போதிலும் அங்கு இதுவரை எந்தவொரு கப்பலும் நங்கூரப்படாத நிலையில், கப்பலை காணாத துறைமுகமாக தமது பிரதேசத்திலுள்ள துறைமுகம் விளங்குவதாக உள்ளது குறித்து பிரதேச மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம் . அஷ்ரப், சந்திரிகா பதவிக் காலத்தில் துறைமுக அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தக துறை முகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
டென்மார்க் அரசாங்கத்தினால் 10 வருட கடன் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக வேலைகள் முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது;.
மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை, மீன்பிடி படகுகள் அதில் நங்கூரமிடுவதால் அது சுறுசுறுப்புடன் இயங்குகிறது. ஆனால் வர்த்தக துறைமுகத்தை பொறுத்தவரை, துறைமுகப் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், அங்கு இராணுவம் மற்றும் கடற்படையினரே தற்போது காணப்படுகின்றனர்..
அதேவேளை துறைமுக அபிவிருத்தி பணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்ட ஈட்டு கொடுப்பணவு ஆறு வருடங்களுக்கு முன்னதாக அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டும் அது இதுவரை வழங்கப்படவில்லை.
துறைமுக திறப்பு விழாவின் பிரதேச போது ஜனாதிபதி அவர்களினால் ஒரு சிலருக்கு முதற்கொடுப்பணவு என கூறி வழங்கப்பட்ட தொகைக்குரிய காசோலை கூட பணக்கொடுப்பணவு நிறுத்தம் என குறிப்பிடப்பட்டு வங்கியினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

யாழில். மக்கள் ஆர்ப்பாட்டம்; மன்னார் மக்கள் மிரட்டப்பட்டு தடுக்கப்பட்டனர்

140215174059_jaffna_protest_sri_lanka_304x171_bbcஇலங்கையின் வடக்கே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் நிலைமை, பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியறுத்தி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. ‘ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்துவதற்குக் கூட தடைகள் விதிக்கப்படுகின்றன’  ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு நிலைமையில் உள்நாட்டில் பிரச்சினைகளுக்குத் தீரவு காணமுடியாது. ஆகவே, இதனை சர்வதேசம் கவனத்திற்கொண்டு, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு காணும் வகையில் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற நடவடிக்கைகளின் மூலம் அபிவிருத்தியின் ஊடாக இந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த அபிவிருத்தி உதவப் போவதில்லை. ஏன்று கூறினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து மக்கள், மூன்று பஸ் வண்டிகளில் இலுப்பைக்கடவைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சிலநபர்கள் அந்த பஸ் வண்டிகளின் சாரதிகளுக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும். மக்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றால் அந்த பஸ் வண்டிகள் எரிக்கப்படும் என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து குறித்த சாரதிகள் தமது பயணத்தை நடுவழியில் நிறுத்திக் கொண்டு மன்னாருக்கே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சோதி குரூஸ் தெரிவித்தார்.  

அந்த நேரம் இங்கு இருந்திருந்தால் அன்றைக்கு நீங்களும் காணாமற்போயிருப்பீர்கள்

missing_people_enquiry_jaffnaகாணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.  தொடர்ந்து சாவகச்சேரியில் நேற்று நடைபெற்றது. இதன்போது காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மனைவி தனது கணவரை, அல்லது தாய் தனது மகன்கள் தொடர்பாக அதிகமாக சாட்சியமளிக்க வந்திருந்தனர். இந்நிலையில் காணாமற்போன முருகன் சிவராஜா, முருகன் ஜெயரட்ணம் என்ற தனது இரண்டு மகன்கள் சார்பாகவும் சாட்சியமளித்த  சாவகச்சேரியினைச் சேர்ந்த முருகன் என்ற முதியவர் வந்திருந்தார். அவர் சாட்சியமளிக்கையில்,  ‘எனக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு ஆண்பிள்ளைகள் அவர்கள் இருவரும் வயலில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை மீட்க நான் தேடாத இடங்கள் இல்லை. இருந்தும் எனக்கு என் மகன்கள் கிடைக்கவில்லை. நானும் ஒரு கூலி வேலை செய்து பிழைப்பவன் பிழைப்பினைப் பார்ப்பதா? எனது ஏனைய மூன்று பிள்ளைகளையும் பார்ப்பதா அல்லது எனது காணாமற்போன 2 மகன்களைத் தேடுவதா என வினவினார். இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் ‘ உங்கள் மகன்களை பிடித்துச் சென்ற இராணுவத்தினரை அடையாளங்காட்ட முடியுமா எனக்கேட்டனர். அதற்குப் பதிலளித்த முதியவர் ‘ போங்கய்யா, என்ர பிள்ளைகள் பிடிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை என்னால் எவ்வாறு அந்த இராணுவத்திரை ஞாபகம் வைத்திருக்க முடியும். எனக்கும் வயதாகிவிட்டது. இதேமாதிரியாக பல தடவைகள் பல இடங்களில் கேட்டுவிட்டார்கள். நீங்களும் இதேதான் கேட்கின்றீர்கள் இருந்தும் என் பிள்ளைகள் மட்டும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்கின்றேன். நீங்கள் மட்டும் அந்த நேரம் இங்கு இருந்திருந்தால் அன்றைக்கு நீங்களும் காணாமற்போயிருப்பீர்கள்’ என்றுகூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். தேவாலயத்தில் வைத்து எனது அண்ணாவையும் மேலும் 23 பேரையும் கொண்டு சென்றனர்  நாவாற்குழியில் 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி துமிந்த என்கிற இராணுவ அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது, தேவாலயத்திலிருந்த எனது அண்ணன் மற்றும் மேலும் 23 பேரை இராணுவத்தினர் கொண்டு போயினர்.  ஆதற்கு பின்னர் அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லi என காணாமற்போன பிரேமதாஸ் ஸ்ராலின் ஜீவாவின் தங்கையான பிரேமதாஸ் ஜுவா சாட்சியமளித்தார்.

கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு 

140215110458_srilankavalachenai_paper_factory_srilanka_304x171_bbc_nocreditகடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில், சம்பளத்தை வழங்கக்கோரி ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 25வது நாளாக தொடர்வதையடுத்து ஆலையின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. 60 வருடங்களுக்கு முன்னர் வைக்கோலை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலையில் தற்போது கழிவு கடதாசிகளை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்தி நடைபெறுகின்றது. வெளிநாடுகளிலிருந்து வரும் காகித இறக்குமதி, இயந்திரங்கள் பராமரிப்பின்மை மற்றும் போர்ச் சூழல் காரணமாக ஏற்கனவே ஆலை நஷ்டமடைந்துள்ள போதிலும் சொற்ப எண்ணிக்கை ஊழியர்களுடன் குறிப்பிட்ட வகை கடதாசி இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யுப்படுகின்றது. Read more

புளொட்’ அமைப்பால் ஊன்றுகோல் வழங்கி வைப்பு-

2014-02-14 13.39.532014-02-14 13.40.01யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கின் ஒரு அங்கமாக இன்று மதியம் முல்லைத்தீவு தண்ணீரூற்று ‘சாய்’ இல்லத்தில் அதன் பொறுப்பாளர் திரு தவராஜா தலைமையில் புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், புளொட் நிதிப் பொறுப்பாளருமாகிய கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களினால் ஊன்றுகோல்கள்  வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி ஒரு தொகை ஊன்றுகோல்களை புளொட் அமைப்பின் ஜெர்மன் கிளைத் தோழர்கள் சேகரித்து அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சர்வதேச அரங்கில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்- இந்தியா

_salman_kurshid_indiaகொழும்பிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை புதன்கிழமை டில்லியில் சந்தித்து பேசியபோது சல்மான் குர்ஷித் இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு சர்வதேச சமூகத்தில் நிலவ வேண்டுமாயின், இலங்கை சர்வதேச அரங்கில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்  அதற்கு ஏற்ற வகையில் திருப்திகரமான முன்னேற்றங்களை இலங்கை காண்பிக்க வேண்டியது அவசியம். அதே வேளை சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தபடுவதற்கு இந்தியா இடமளிக்காது இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்வுக் குழு அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெறும் வகையில் இருக்க வேண்டும். அந்தக் குழுவின் நம்பகத்தன்மை குறித்து பிரச்சினைகள் உள்ளன. இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்து இறங்கியவுடன் விசாவைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் இலங்கையர்களுக்கு வழங்குவதில் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன .என்று இந்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ளத் தீர்மானம் மீது இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தெரிவக்கப்படவில்லை.. இந்தக் கூட்டத்தில் இருநாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை. 

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி தொழில் முறைகளை யாழ் மீனவர்கள் கைவிடவேண்டும்.

imagesஇலங்கையில் அதிகாரபூர்வமாகத் ‘ட்ரோலிங் தொழில், தங்கூசி வலை, சுருக்கு வலைகளைப் பயன்படுத்துதல், குழைபோட்டு கணவாய் பிடித்தல், வெடிபோட்டு மீன்பிடித்தல், கம்பியால் குத்தி மீன்பிடித்தல் போன்ற தொழில் முறைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றை, பல மீனவர்கள் பயன்படுத்துகின்றார்கள். எனவே தான் அவற்றைக் கைவிட்டு ஏனைய தொழில் முறைகளைப் பயன்படுத்துமாறு கோரியிருக்கின்றோம்’. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் பிரவேசித்துப் பயன்படுத்துவதனால், இருநாட்டு மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இன்றைய காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் தடைசெய்யப்பட்டுள்ள தொழில் முறைகளை யாழ் மீனவர்கள் கைவிட வேண்டும். அவ்வாறு கைவிடாவிட்டால், கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், காவல்துறையினர், கடற்படையினர் ஆகியோரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு எதிராகக்கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மீனவர்களுக்கு மட்டுமே, இந்த எச்சரிக்கை, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக் கூடாது என்பதே தமது கோரிக்கை. ‘அண்மையில் செய்து கொள்ளப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர்களின் ஒப்பந்தத்தில், கைது செய்யப்படுகின்ற இருநாட்டு மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனிடையே, ஜனவரி மாதம் 9 ஆம் தேதி இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரக அதிகாரிகளிடம் மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.