Header image alt text

ஐ. நா. சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலையில் ஹர்த்தால்.

trinco aarpaattam (3)trinco aarpaattam (1)trincohartalgenevatrinco aarpaattam (2)ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளை முறியடிப்போம் என்ற தலைப்பில் சிங்கள ,தமிழ், முஸ்லிம் மக்கள் ஓன்றியம் என குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன்றின் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது திருகோணமலை நகரப் பிரதேசத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக நகரிலும் அண்மித்த பகுதிகளிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் போக்குவரத்து சேவை வழமை போல் ஆரம்பமான போதிலும் ஆங்காங்கே இடம். பெற்ற கல் வீச்சுக்கள் மற்றும் தாக்குதல்களையடுத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் சில பேருந்து வண்டிகளின் முன் பக்கக் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன. அரசாங்க தனியார் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்கவில்லை. வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. திருகோணமலை நகரில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐ. நா மனித பேரவை உட்பட சில நாடுகளுக்கு எதிரான வாசக அட்டைகளையும் தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டனர். இந்த பேரணியில் பௌத்த பிக்குகள் உட்பட சிங்கள மக்களே பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. பேரணி முடிவில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐ .நா மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. குறிப்பாக தமிழர்களை பொறுத்தவரை ஒரு வித அச்ச உணர்வு காரணமாக இன்று தங்களது வெளிநடமாட்டத்தை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தமது வீடுகளிலே முடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. ஹர்த்தாலுக்கும் பேரணிக்கும் அழைப்பு விடுத்த அமைப்பு ஒரு அநாமேதய அமைப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. அரசாங்க ஆதரவு செயல்பாட்டாளர்களினாலே பின்புலத்திலே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் தெரிவித்திருக்கின்றார். அநுராதபுரம் சந்தியிலிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை கண்டனப் பேரணியொன்றும் நடைபெற்றது.

கிளிநொச்சியில் கைதான மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை

ruki_praveenகிளிநொச்சியில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைதான அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிற்கமைய விடுதலை. அவர்கள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைக் குலைக்க முயன்றதான சந்தேகத்தில் கைதானதாக அதிகாரிகள் கூறினர். இந்த இருவரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, ஜெயக்குமாரி பாலேந்திரன் தொடர்பாக தகவல்களை சேகரிக்க சென்றிருந்தபோது கைதாயினர். ஜெயக்குமாரி இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்

140319102621_crimea_base_304x171_bbc_nocreditக்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள க்ரைமிய துறைமுகத்தின் யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் பல நூற்றுக்கணக்கான ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர். யுக்ரெய்னிய கடற்படையினர் அந்தக் கடற்படைத்தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாக நம்பப்படுகின்றது. ரஷ்ய கொடிகள் அங்குள்ள கட்டிடங்களில் பறக்கின்றன. க்ரைமியாவில் ஒரு ஆயுத மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அங்கு இரு அரசாங்க அமைச்சர்கள் செல்வதாக யுக்ரெய்ன் கூறுகின்றதுஆனால், அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்ய ஆதரவிலான அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். க்ரைமியாவில் கடந்த ஞாயிறன்று 96 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த, மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில், யுக்ரெய்னில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவது என்று பெரும்பாலானோர் வாக்களித்ததை அடுத்து  ஐநா மற்றும் சர்வதேச சமூகத்துக்கான ஒரு கோரிக்கை ஆவணத்தில், க்ரைமியாவின் நாடாளுமன்றம், தம்மை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளது. ரஷ்யாவின் ஒரு பகுதியாக இணைவதற்கான 140317100040_crimea_referendum_512x288_ap_nocreditமுறையான கோரிக்கையை விடுப்பதற்காக க்ரைமியாவின் பிரதமர் முயற்சித்துள்ள நிலையில். மேற்கு நாடுகள் அதிருப்திக்கு இடையே, க்ரைமியா யுக்ரெய்னில் இருந்து பிரிவதற்கு முடிவெடுத்த பின்னணியில், இது தொடர்பில் ரஷ்யா மீது எப்படியான தடைகளை விதிக்கலாம் என்று  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஆராய்கிறார்கள். க்ரைமிய மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை சட்ட விரோதமானதாகப் பார்க்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதற்கான பதிலடி குறித்து ஆராய்கின்றன.

மலேசிய விமான மர்மம் நீடிக்கின்றது தேடுதல் தொடர்கிறது-

malaysian airlinesபத்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய சமிக்ஞைகள் தனது ராணுவ ராடாரில் பதிவாகியிருப்பதாக, இப்போது அண்டை நாடான தாய்லாந்து கூறுகிறது. இந்த சமிக்ஞைகள் மலாக்கா ஜலசந்தியை நோக்கி அந்த விமானம் மேற்குப்புறமாகப் பறந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டுவதாக அது கூறியது. தாய்லாந்தின் இந்தத் தகவல், முன்னர் மலேசிய ராணுவம் தெரிவித்த உறுதிப்படுத்தப்படாத தகவலுக்கு வலு சேர்க்கிறது.. தேடும் முயற்சியில் மேலும் 9 சீனக் கப்பல்கள் சுமார் மூன்று லட்சம் சதுர கிமீ பரப்பளவுள்ள பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தச் சென்றிருப்பதாக, சீன அரசு தெரிவித்தது. Read more

மன்னாரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அழைப்பு-

imagesமன்னாரில் நாளை நடைபெறவுள்ள சத்தியாக்கிரகப போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஆகியன இணைந்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துகின்றன. இப் போராட்டமானது மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச்சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரை காண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டியும், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், மீள்குடியேறி நான்கு ஆண்டுகளாகியும் முறையாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதனைக் கண்டித்தும், இந்திய வீட்டுத் திட்டத்தில் மீள்குடியேற்ற கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதையும், கிளிநொச்சி தர்மபுரம் ஜெயக்குமாரியையும் அவரது மகளினதும் கைதை கண்டிப்பதுடன் அதற்கு நியாயம் கேட்பதுடன் வன்னிப் பிரதேசம் எங்கும் திடீர்ரென தொடங்கிய இராணுவ சோதனையை கண்டித்தும் திட்டமிட்ட நில அபகரிப்பும் சிங்கள குடியேற்றத்தை தடுக்கக் கோரியும் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் இடம்பெறவுள்ளது. மன்னார் பொது விளையாட்டரங்கில் நாளை காலை 9.30முதல் மாலை 3.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு-நிமல்கா பெர்னாண்டோ-

nimalka fernandoஇலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவையின் பிரதிநிதி கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இது குறித்து தெரிவித்ததாவது, ‘இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ குழுக்களுக்கு எதிரான வன்முறைகளில் எம்மால் அதிகரிப்பைக் காண முடிகின்றது. குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் தவறியுள்ளது. எனவே அமைப்பின் சிபாரிசுகளை கவனத்திற் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள முடிவை வழங்குவதற்கு நிர்வாகத்தினரால் சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம்,’ என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறை தொடர்பில் அதிகளவு முறைபாடுகள் பதிவு-

cafeமேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பிலான் முறைபாடுகள் இம்முறை அதிகளவில பதிவாகி இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெற்கு மேல் மாகாண சபைகளிலேயே ஊடகத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளும் அதிக அளவில் மத்திய நிலையங்களை கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அதிகளவான முறைபாடுகள் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவதை காட்டிலும், மதுபோதையின் காரணமாக ஏற்படுகின்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் தினத்தில், பாதுகாப்பின் தற்போதிருப்பதை விட மூன்று மடங்காக அதிகரிக்குமாறு காவற்துறையிடம் கோரி இருக்கிறோம். வாக்களிப்பை குழப்பியடிக்கும் முயற்சிகள் தொடர்பான முறைபாடுகளும் கிடைத்துள்ளநிலையில், அவற்றை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

தூக்கு தண்டனை தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு-

alugusuதூக்குத் தண்டனை தொடர்பான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை உள்ளடங்கிய அறிக்கை நீதியமைச்சுக்கு கையளிக்க நடவடிக்கை மேற்காள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஷந்ராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். கண்டி, போகம்பர சிறைச்சாலைக்கு வந்த 90சதவீதமான மக்கள் தூக்குத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனைத் தவிர தற்போது கிருல பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தூக்குமேடையை பார்வையிட்ட பெரும்பாலோனோர் தூக்கு தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர். இந்நிலையில் மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை நீதியமைச்சிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியமளிப்பு-

mattakalappil saatsiyamகாணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் இன்று சாட்சி விசாரணைகள் நடைபெற்றன. இன்று சாட்சியமளிப்பதற்காக 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் நூற்றுக்கும் அதிகமானோர் சமூகமளித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு – வாகரை, தெற்கு கிரான் ஆகிய பகுதிகளில் சாட்சி விசாரணைகள் பதிவுசெய்யப்படவுள்ளன. இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாதவர்கள், இந்த 03 நாட்களில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 74 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது-

indian fishermen arrestஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட, மேலும் 74 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 53 மீனவர்கள், 13 மீன்பிடி படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும், ஏனைய 21மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்-

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி ஊடக சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்ததாவது, ‘பல விடயங்களைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்குள் நாட்டு மக்களை தள்ளிவிட அரசாங்கம் தயாரில்லை. அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அந்த இடத்திற்கு ஆயுதம் எவ்வாறு வந்தது? இதனுடன் யார் தொடர்புபட்டுள்ளார்கள், என்பது தொடர்பில் பரந்த அளவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 30 ஆண்டுகால மோதல்களில் இருந்து மீண்ட மக்களை மீண்டும் அந்நிலையிலேயே வைத்திருக்க நாங்கள் தயாரில்லை. ஆகவே, ஜெனீவா தீர்மானத்திற்கு பயந்து நாட்டின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை.’ என்றார்.

ஜெயக்குமாரி ஐ.சி.ஆர்.சி உறுப்பினர்கள் சந்திப்பு-

missing_peopleகிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மாவட்டத்தின் பூஸா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். இன்றையதினமும் நேற்றுமே அவர்கள் ஜெயக்குமாரியை சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் பாலேந்திரன் விபூசிகா (13) நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

தேர்தல் தொடர்பில் 898 முறைப்பாடுகள் பதிவு-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 898ஆக உயர்வடைந்துள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது. இதில் 854 சம்பவங்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பானது என கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேல் மாகாணத்தில் 515 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தில் 320 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் கபே சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியாவில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்-

sivasakthi ananthanவவுனியாவில் உள்ள கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக சிவில் உடை தரித்த இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு, தேடுதல் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வவுனியாவின் பூந்தோட்டம், அண்ணாநகர், மகாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினர் வியாழன் நண்பகல்வரை அதனைத் தொடர்கின்றனர். இவ்வேளை வீடுகளில் பட அல்பங்களும் சோதிக்கப்படுகின்றன. இன்றுகாலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் ஆங்காங்கே அடையாள அட்டை பரிசோதனை மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம்பெறும் இடத்தினைப் போன்று அவர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடித்திரிந்ததாகவும் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். Read more

கொலை, ஆட்கடத்தல்களுக்கு எதிராக கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்-

northern_province

unnamed20140318_143510vada maakaana sabai aarpaattam (3)vada maakaana sabai aarpaattam (2)photo

;ஜனநாயகப் படுகொலை, நீதிக்கு புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பங்கேற்புடன் மாகாணசபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் நடாத்தப்பட்டுள்ளது. வடக்கில் போர்க்காலத்தில் காணாமற்போனவர்களை தேடி அலையும் குடும்பங்களின் போராட்டத்தை முடக்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டு பூஸா முகாமில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா அகியோரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில்; கண்டனப் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பி;னரும் வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் உட்பட பலரும் பங்கு பற்றியிருந்தனர். இன்று காலை 9 மணியளவில் வடக்கு மாகாணசபையின் 7ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இதனையடுத்து பிற்பகல் 2மணியளவில் மாகாண சபையின் முன்பாக ஏ-9 வீதியில் இந்தக் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதேயான மகள் விபூசிகா ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என பிரதானமாக வலியுறுத்தப்பட்ட அதேவேளை வடக்கில் தொடரும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளை அரசாங்கமும் படைத்தரப்பினரும் நிறுத்த வேண்டுமெனவும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் கூடிய கவனம் செலுத்தி தமிழருக்குகெதிரான அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமெனவும் கோரப்பட்டது.  Read more

போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து தாக்குதல்

ctb busயாழிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மடத்தடியில் வைத்து இன்று காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில், அதில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்ததுடன், பேருந்தின் முன்பக்க கண்ணாடிகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான பேருந்து, பேருந்து நிலையத்தில் தரித்து நின்றவேளை அங்கு வந்த சிலர் பேருந்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு முயன்றுள்ளனர். அதனை சாரதியும், நடத்துனரும் மறுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி பேருந்து மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது- இரா.சம்பந்தன்

sampanthanஇலங்கையை தண்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில முக்கியமாக ஆற்றப்படவிருந்த கடமைகளை இலங்கை அரசாங்கம் இதுவரையில் முன்னெடுக்கத் தவறியுள்ளமையை சுட்டிக்காட்டுவதே நோக்கம். இலங்கை அரசாங்கம் வலுவான, ஸ்திரமான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக கருதப்பட்ட போதிலும், பிழையான பாதையில் செல்வதே வருத்தமளிக்கின்றது. தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். வட மாகாண ஆளுனரின் மீது தனிப்பட்ட குரோதங்கள் எதுவும் கிடையாது .எனினும், இராணுவ அதிகாரியொருவர் அதுவும் அரசாங்கத்திற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஒருவரை ஆளுனராக நியமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் பல்வேறு பொதுமக்கள் விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகதவும். மாகாணசபை முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என த.தே.கூ நாடாளுமன்ற குழு தலைவர் இரா. சும்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்

மழை வேண்டி மட்டக்களப்பில் பிரார்த்தனை

batticaloaஇலங்கையில் இந்த ஆண்டுக்கான பருவமழை குறைந்ததன் காரணமாக குளங்கள் மற்றும் ஆறுகளை நம்பிப் பயிரிடும் சிறுபோக நெல் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலையும் வெளியிட்டுள்ளார்கள். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெய்யவேண்டிய பருவமழை இன்னமும் பெய்யாத நிலையில் அநேகமான பிரதேசங்களில் வரட்சி நிலை காணப்படுகின்றது. மழை இல்லாத நிலையில் விவசாய நீர்ப்பாசனக் குளங்களிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டமும் குறைந்து வருகின்றது. நாட்டின் தற்போதைய வரட்சி நிலையை நீக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின்பேரில் மழை வேண்டி பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான பருவமழைக் குறைவு காரணமாக சிறுபோக நெல் வேளாண்மைச் செய்கையை மட்டுப்படுத்துமாறு நீர்ப்பாசன இலாகாவினால் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களது வேளாண்மைச் செய்கையில் விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் சிறுபோகச் செய்கைக்கு அடையாளம் காணப்பட்டுள்ள 60, 000 ஏக்கரில் இந்த ஆண்டு 17, 500 ஏக்கரில் மாத்திரம் நெற் பயிரிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் சேவைகள் உதவி ஆணையாளர் என். சிவலிங்கம். நகைக்கடை உரிமையாளர் ஒருவரை அவர் பயணித்துக்கொண்டிருந்த காருடனேயே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காரையும் பணத்தையும் கொள்ளையிட்டுவிட்டு காட்டில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வாகரை, புல்லாவி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நகைக்கடை உரிமையாளரை கடத்தி கொள்ளை

imagesCAOTQVDZதிருகோணமலையில் இருந்து நேற்று ஞாயிற்றக்கிழமை மட்டக்களப்பு நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர், வாகரை, புல்லாவி பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத இரு சந்தேகநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். வாகரை, காயங்கேணி பாலத்திற்கு அருகில் மலசலம் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பற்றைக்கு சென்றபோதே அங்கு வந்த சந்தேகநபர்கள் இருவரும் இவர்கள் இருவருக்கும் துப்பாக்கியை காட்;டி அச்சுறுத்தியுள்ளதுடன் இருவரின் கைகளை பின்புறமாக கயிற்றால்கட்டி காருடன் புல்லாவி பிரதேச காட்டிற்குள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட கார் காட்டின் உட்பகுதிக்குச் சென்றதும் அங்கு வேறு நான்குபேர் கடத்தல்காரருடன் இணைந்துள்ளனர். பின்னர் இன்று திங்கட்கிழமை காலை நகைக்கடை உரிமையாளரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கைதொலைபேசி என்பற்றுடன் காரையும் கொள்ளையிட்டுவிட்டு  இருவரையும் காட்டில் விட்டுச்சென்றுள்ளனர். இது தொடர்பில் நகைக்கடை உரிமையாளரால் 119 பொலிஸ் அவசர சேவைக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கடத்தப்பட்ட காரை, வாகரை கஜயுவத்தை கடற்படைமுகாமிற்கு அருகாமையில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் விசாரணைக்காக கொழும்பில்

imagesCA5PZGM2கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற தாயாரும், அவருடைய 14 வயதுடைய மகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராகிய ருக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராகிய அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகிய இருவரும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டபோது தர்மபுரம் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இவர்கள் தகவல்களைத் திரட்டச் சென்றிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ‘காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் செயற்பட்டாலும் அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவே கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றது.

தாய் ஜெயக்குமாரி பூஸாவில், மகள் நன்னடத்தை நிலையத்தில்- நீதிமன்றத்தீர்ப்பு

missing_peopleகிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் வியாழனன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் வெள்ளியிரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். தாயாராகிய ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவருடைய 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை. காணமல் போயுள்ள தனது மகனுடைய விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவே இந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரி பாலேந்திரனின் விடுதலை கோரி கவனயீர்ப்பு போராட்டம்- வவுனியா

11(966)18(141)jeyakumari_protestகிளிநொச்சி தர்மபுரம் இந்திய வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பாலேந்திரன் ஜெயக்குமாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயகுமாரியின் மகள் விபுசிகா பாலேந்திரன் சிறார் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டிருந்தார். இவர்கள் கைதைக் கண்டித்தும் ஜெயக்குமாரியையும், மகளையும் விடுதலை செய்யக் கோரியும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியோரது ஏற்பாட்டில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடந்துள்ளது. வடமாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும், கட்சிப் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சட்ட விரோத கைதுகளை நிறுத்தக் கோரியும், இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேறச்சொல்லியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் பல்வேறு சுலோகங்களை கையிலே தாங்கியிருந்தனர்

ஆறு மாதங்களுக்கு முன் காணமல் போனவர் உருக்குலைந்த சடலமாக மீட்பு

 imagesCA1ABWOEஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் கோப்பாய்க்குச் சென்றபோது  விஞ்ஞான ஆசிரியராகிய கார்த்திகேசன் நிருபன் காணாமல்போயிருந்தார். மாங்குளம் பிரதேச மாதர் சங்கம் ஒன்றிற்கு அலுவலகம் அமைப்பதற்காக ஏ9 வீதியோரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த காடு அடர்ந்த காணித் துண்டு ஒன்றை கடந்த புதன்கிழமை துப்பரவு செய்தபோது, பற்றைக்குள் சிதறிய நிலையில் மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்களும், கைத்தொலைபேசியொன்று, குறிப்புப் புத்தகம், உள்ளிட்ட சில முக்கிய தடயப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பொருட்களில் இருந்து இறந்தவர் தனது சகோதரன் என்று நிருபனின் சகோதரி அடையாளம் காட்டியிருந்தார். குடும்பத்தினரும், ஆசிரியர் சங்கத்தினரும் அழுத்தம் தந்தும்கூட காவல்துறையினர் இதுவரை சரியான விசாரணைகளை நடத்தியிருக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சுமத்தினார். ‘மாங்குளத்தில் மீட்கப்பட்டுள்ள மனித சடல எச்சங்களும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தப் பரிசோதனையின் முடிவு வரும் வரையில் மரணம் என்ன காரணத்தினால் ஏற்பட்டது என்பதைக் கூறுவது கடினம். எனினும் எங்களுக்குக் கிடைத்துள்ள தடயங்கள், தகவல்களின் அடிப்படையில் நாங்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றோம்’ என காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை

fishermen_exchangeஇலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து பின்னர் குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்கின்ற வேளையில், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளைப் பறிமுதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. Read more

கிளிநொச்சி விவகாரம் தலையிடுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை – கூட்டமைப்பு  

2014 மார்ச் 13 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரியில் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற விதவைப் பெண் மற்றும் விபூசிக்கா என்ற அவருடைய 13 வயதேயான மகளை கைது செய்தமைக்கு எதிராகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்த எதிர்ப்பை தெரிவிக்கின்றது. என்பதுடன் இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிடவேண்டும் என்றும் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜெயக்குமாரியின் வீட்டுப் புறத்தில் இருந்து துப்பாக்கி வேட்டு சப்தங்கள் கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து ஒரு பொலிஸ்காரருக்கு குண்டடி பட்டு காயம் ஏற்பட்டதாகவும், ஜெயக்குமாரியின் வீட்டிட்குள்ளேயே துப்பாக்கி சூடு நடத்திய நபர் அல்லது நபர்கள் பதுங்கி இருப்பதாக தமக்கு தென்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.  பொதுவாக வட மாகாணத்தில், காணாமல் போனோரின் குடும்பத்தார் நடத்தும் கவன ஈர்ப்பு  போராட்டங்கள் அனைத்திலும் ஜெயக்குமாரி பங்கேற்பதுண்டு. இதற்கான காரணம், அவருக்கு இருந்த மூன்று ஆண் மக்களில் இருவர் யுத்தத்தில் மாண்டு போனதன் பின், யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 மே மாதத்தில் எஞ்சியிருந்த தன்னுடைய மூன்றாவது மகனை ஜெயக்குமாரி பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தாலும், அதன் பின் அந்த மகனை பற்றிய எந்த தகவலும் ஜெயக்குமாரிக்கு இன்றளவிலும் கிடைக்கவில்லை என்பதேயாகும். அநேகமாக ஜெயக்குமாரிக்கு தற்போது உயிரோடு எஞ்சியிருக்கும் ஒரே பிள்ளை அவருடன் கைது செய்யப்பட டுள்ள மகள் விபூசிக்காவாகவே இருக்கலாம். சுமார் 700 பேர் கொண்ட பட்டாளம் ஒன்று கடந்த நாள் மாலை ஜெயக்குமாரியின் வீட்டை முற்றுகையிட்டது. அதன் பின் அவருடைய கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றிய அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரம் ஜெயக்குமாரியிடம் கேள்விகளை கேட்டதன் பின் அவரையும் அவருடைய மகள் சிறுமி விபூசிக்காவையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். பிறகு விதவைத் தாயும் அவருடைய சேயும் வவுனியாவில் உள்ள ஒரு முகாமில் நேற்று இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக மறுநாள், அதாவது 14 மார்ச் தாயும் சிறுமியும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றே நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கவலை கொண்ட பொது மக்கள் பலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஆர். சரவணபவன் இருவரும் நாள் முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் மாலை மூன்று மணியான பின்பும் ஜெயக்குமாரியையோ அவருடைய மகளையோ எவரும் நீதிமன்றத்திற்கு  அழைத்து வரவில்லை. பிறகு கிடைத்த தகவலின் படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுரைப் படி பயங்;கரவாத தடுப்புச் சட்டம் எனும் கெடூரமான சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரியையும் அவருடைய மகள் சிறுமி விபூசிக்காவையும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. கைது செய்யப்படும் ஒரு சந்தேக நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்ற நியதியை மீறும் அதிகாரத்தை பயங்கரவாத தடுப்புச் சட்டம் தருகின்றது. ஜெயக்குமாரி மற்றும் அவருடைய மகள் விடயத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டுள்ள இரக்கமற்ற விதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தந்துள்ளது. அரசின் செயற்பாடுகள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கடும் விமர்சனத்திற்கு இலக்காகி வரும் இந்நாட்களில் கூட அரசு துணிச்சலாக ஒரு தாயும் சேயும் விடயத்தில் நடந்து கொண்டுள்ள கொடூரமான விதத்தை பார்க்கும் போது, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை தாம் சிறிதளவேனும்பொருட்படுத்துவதில்லை என்பதை மறைமுகமாக அரசு கூறுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறிருந்த போதிலும், ஜெயக்குமாரியையும் அவருடைய மகள் விபூசிக்காவையும் உடனடியாக  நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர்களை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தமிழ் பெண்கள் விடயத்தில் அதிகரித்து வரும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை கருத்தில் கொள்ளும் போது ஒரு இளம் விதவையும் அவருடைய இளம் வயது மகளும் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அவர்களுடைய உயிர் மற்றும் மானத்திற்கு பங்கம் ஏற்படக் கூடிய நிலையை உருவாக்கி விடுமோ என தமிழத் தேசியக் கூட்டமைப்பு கவலை கொள்கின்றது.

ஆகையால், ஜெயக்குமாரிவையும் விபூசிக்கா சிறுமியையும் காப்பாற்றுவதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சர்வதேச சமூகத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

அரசுக்கு புலிகளை உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது- சிவசக்தி ஆனந்தன்

தெற்கில் அரசியல் செய்வதற்கு அரசு விடுதலைப்புலிகளை உயிர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா. ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாறறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்- இந் நேரத்தில் ஜெயக்குமாரியின் குடும்ப நிலையை சொல்லவேண்டிய தேவையுள்ளது. அவருடைய கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவருடைய இன்னுமோர் மகன் இந்த போராட்டத்தில் வீரச்சாவு அடைந்துள்ளார். அதேபோல் இன்னொரு மகன் முள்ளிவாய்க்கால் போரில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந் நேரத்திலேயே அவருடைய மூன்றாவது மகன் இடம்பெயர்ந்து வவுனியா முகமில் தங்கியிரு;த நேரத்தில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். அந்த வகையில் ஜெயக்குமாரியின் மூன்று பிள்ளைகள் இன்று இல்லாமல் போயிருக்கின்றார்கள். இந்த வேளையிலேயே தனது 13 வயதான விபூசிகாவின் படிப்பு மற்றும் பொருளாதாரத்திற்காக ஜெயக்குமாரி நாளாந்தம் தினக்கூலி வேலை செய்தே காப்பாற்றி வந்துள்ளார். எனவே ஜனநாயக ரீதியான போராட்டத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் விடுதலைக்கு குரல் கொடுக்கவேண்டும் என நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த நிலையிலேயே காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஜெயக்குமாரியும் அவருடைய மகளும் போராட்டங்களில் பங்கு பற்றியிருந்ததன் அடிப்படையில் ஊடகங்களில் முக்கியமான இடம்பிடித்திருந்தமையினால் தற்சமயம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை தொடுர்பான கூட்டத்தொடரிலே ஜெயக்குமாரியோ அல்லது அவருடைய மகளோ சாட்சியமளித்து விடக்கூடாது என்பதற்காக மிக திட்டமிட்டு இந்த கைது இடம்பெற்றுள்ளது. இந்த கைதுக்கு பல காரணங்கள் சொல்லபப்டுகின்றது. ஆனால் இந்த காரணங்கள் இன்றைக்கு உண்மையை மறைக்கும் விதத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களாககவுள்ளது. இந்த ஜெனீவா கூட்டத்தொடரில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் ஆயுதங்கள் வைத்தீரக்கின்றார்கள் அல்லது பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகின்றது என பல புனைகதைகளை கூறி இன்று சோடிக்கப்படுகின்றது. இன்று யுத்தம் முடிந்து 5 வருடம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு இடத்திலும் துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை. அல்லது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த சம்பவம் கூட திட்டமிட்டு சோடிக்கப்படும் கதையே ஆகும். ஆகவே மீண்டும் இந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஆயதபோராட்டத்தையும் வலிந்து இழுக்கும் தேவையுள்ளது. அதற்கு காரணம் தெற்கில் அவர்களின் அரசியலை முன்னெடுத்து செல்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் இந்த ஆயத போராட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டிய தேவை இந்த அரசுக்கு உள்ளது. ஆகவே இந்த திட்டமிட்ட கைதுகள் கண்டிக்கப்படுவதோடு ஜெயக்குமாரி விடுதலை செய்யப்படவேண்டும். அத்தோடு அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்

துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் கைகலப்பு- ஒருவர் பலி

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றுகொண்டிருந்த போது ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இரண்டு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனையடுத்தே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்  புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான செட்டியார்தெரு யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஜெயரட்னம் தர்ஷன் அமல்ராஜ்(வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடியில் எதிர்ப்புப் போராட்டம், மகஜரும் கையளிப்பு-

nelliyadi poraattam (1) nelliyadi poraattam (2) nelliyadi poraattam (3)பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள், குற்றச் செயல்கள் மற்றும் மது பாவனைக்கு எதிராக யாழ். வடமராட்சி நெல்லியடி பஸ் நிலையத்தில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றுகாலை 10.30மணிக்கு ஆரம்பமான போராட்டம் பேரணியாக நகர்ந்து கரவெட்டி பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன் பிரதேச செயலர் சிவசிறி அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதி வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நிறுத்து, சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடு, பெண்கள் என்ன போதைப் பொருளா? என கோஷம் எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ச.சுகிர்தன், வே.சிவயோகன், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா, மாகாணசபை வேட்பாளர் தர்மலிங்கம் மற்றும் மகளிர் அமைப்புக்கள், பொதுமக்கள் என பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வலி மேற்கில் அபிவிருத்தித் திட்டங்கள்-

vali metku apiviruththi thittankal (14)vali metku apiviruththi thittankal (9)vali metku apiviruththi thittankal (3)vali metku apiviruththi thittankal (1)யாழ்ப்பாணம் வலி மேற்கில் மக்கள் பங்கேற்புடன் அபிவிருத்தித் திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றது. வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவு ரீதியாகவும் அம் மக்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய செயல் திட்டங்கள் தொடாபாக வலி மேறகு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்களின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர், கிராம சேவையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் துறைசார் வல்லுனர்களின் உதவியுடன் இச் செயல்திட்டம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு பொதுமக்களும் தமது கருத்துக்களை முன்வைக்கக் கூடியவாறு இச்செயற் திட்டம் அறிமுகப்படுத்த்பபட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததன் பின்னர் முதன்மைத் திட்டத்தினை தெரிவுசெய்வதற்கு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு அதிகூடிய வாக்கை பெற்ற திட்டம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. கடந்த வாரம் ஆரம்பமாகிய இச் செயல் திட்டம் எதிர்வரும் 27ம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறுமென கூறப்படுகிறது.

மன்னாரில் 21இல் உண்ணாவிரதம்-

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களும் இணைந்து இந்த உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மன்னாரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலும், மன்னார் மனித புதைகுழி தொடர்பிலும் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் ஆகியவற்றுக்கு நீதிவேண்டுமென கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடுமையான பிரேரணையை நிறைவேற்ற ஒத்துழைப்பு கோரல்-

இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஒன்றை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் பிரித்தானியா கோரியுள்ளது. இதனை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ள எழுத்துமூல அறிக்கை ஒன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த தீர்மானம் கைவிடப்படவில்லை. இதனை மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், மற்றும் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய திணைக்கள அமைச்சர்களும், அதிகாரிகளும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துக்கு நாடுகளுடன் பேச்சு நடத்துகின்றனர். இவ்வாறான மற்றுமொரு பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் நகரசபையிடம் சர்ச்சைக்குரிய காணி கையளிப்பு-

mannar unnaavirathammannar kaaniமன்னார் சாவற்கட்டு 30 வீட்டுத் திட்டத்தின் முன்பாகவுள்ள காணி நேற்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மன்னார் நகர சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணிக்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுற்பகல் மன்னார் நகர சபையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மன்னார் முகாமையாளர் டி.யூட் செல்வராஜா குலாஸ் மன்னார் நகரசபை முதல்வர் எஸ். ஞானபிரகாசத்திடம் காணிக்காண ஆவணத்தினை வழங்கிவைத்தார். இதில் நகரசபையின் உபதலைவர் யோசுதாசன் ஜோம்ஸ் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் நகரசபையின் ஊழியர் எஸ்.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த அரச காணியை தனியார்கள் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, பின் மன்னார் நகரசபை மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக இக் காணி அபகரிப்பு முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேரணைக்கு ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா மும்முரம்-

இலங்கைக்கு எதிரான தமது பிரேரணைக்கு ஆதரவை திரட்டிக் கொள்ளும் வகையிலான மற்றுமொரு கூட்டத்தை அமெரிக்க அரசாங்கம் ஜெனீவாவில் எதிர்வரும் 18ம் திகதி நடத்தவுள்ளது. அமெரிக்கா ராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏழாம் திகதி அமெரிக்கா இவ்வாறான சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இதில் பிரித்தானியா, மொரீஷியஸ் உள்ளிட்ட 30 நாடுகள் பங்கு பற்றி இருந்தன. இந்த நிலையில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மேலும் பல நாடுகள் பங்கேற்கும் என அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. இதேவேளை அமெரிக்கா ஜெனீவா மாநாட்டுக்கு சமாந்தரமாக நடத்துகின்ற இவ்வாறான தனிப்பட்ட கூட்டங்களுக்கு ஜெனீவாவில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் விடுதலையின் பின்பே இருதரப்பும் பேச்சுவார்த்தை-

இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இரு நாடுகளினதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்வதான உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் இந்தியா அதிக அக்கறைகாட்டி வருகின்றது. இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இலங்கை – இந்திய மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்பதாக இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீனவர்கனை விடுதலை செய்வதற்கான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக மாணவர்கள் உணவுத்தவிர்ப்பு போராட்டம்-

tamilnadu studentஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் சுயாதீனமான பிரேரணை ஒன்றை முன்வைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தி தமிழகம் திருச்சி அரச கல்லூரி மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். 12 மாணவர்கள் இவ்வாறு உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருப்பதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். இதேவேளை அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கான கூடாரத்தை அமைக்க பொலீசார் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கூடாரமின்றி திறந்தவெளியில் தங்களின் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அலுகோசு பதவிக்கு அவுஸ்திரேலியர்கள் விண்ணப்பம்-

alugusuஇலங்கையின் அலுகோசு பதவியில் தங்களை சேர்த்துக்கொள்ளுமாறு இரண்டு அவுஸ்திரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவரும் மின்னஞ்சல் மூலம் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். எனினும், அலுகோசு பதவிக்காக இதுவரை விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. ஏற்கனவே அலுகோசு பதவிக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டவர் பதவியை கைவிட்டுச் சென்றார். எனினும், குறித்த நபர் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காக ஒருமாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனினும் வெளிநாட்டவர் ஒருவரை இங்கு அலுகோசு பதவிக்கு நியமிக்க முடியாதென தெரிவிக்கப்படுகிறது.

யாழில் ஆயர்வேத வைத்தியசாலைகள் உட்பட மூன்று வைத்தியசாலைகள் திறந்துவைப்பு-

hospitals opened 13.03 (1) hospitals opened 13.03 (2)யாழ். தெல்லிப்பழையில் துர்க்காதேவி கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை நேற்றுக்காலை 11 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ப.கஜதீபன், வட மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் திருமதி. துரைரட்ணம், துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன், வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், திரு. திருமுகன் மற்றும் வைத்தியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதற்கு முன்பு நேற்றுக்காலை குரும்பசிட்டி ஆரம்ப வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை நேற்றுமாலை 2மணியளவில கொடிகாமம் ஆரம்ப வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் யாழ். குடாநாட்டில் குரும்பசிட்டி, தெல்லிப்பளை, கொடிகாமம் ஆகிய இடங்களில் மேற்படி மூன்று வைத்தியசாலைகளும் புதிதாக திறந்துவைக்கப்பட்டுள்ளன. இதன்படி தெல்லிப்பளை மற்றும் கொடிகாமம் பிரதேசங்களில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. குரும்பசிட்டி பிரதேசத்தில் சாதாரண ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.

க.மு தம்பிராசாவின் போராட்டம் ஒத்திவைப்பு, 27, 28இல் தொடரும்-

1வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசா அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் 21ஆவது நாளான நேற்றுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி வெகுஜன போராட்டமாக ஆரம்பித்து 28ஆம் திகதிவரை நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போராட்டம் தொடர்பில் க.மு. தம்பிராசா அவர்கள் தெரிவிக்கையில்,
எமது போராட்டத்தின் 20ஆவது நாளான நேற்று முன்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ஹென்ரி மகேந்திரன் அவர்கள் வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதன்போது இந்த வலிவடக்கு சம்பூர் கிராம மக்களின் துன்ப துயரங்களைத் துடைத்தெறிய, அவர்களை மீள்குடியேற்ற, Read more

அகில இலங்கை சிவாலய துவிச்சக்கர வண்டி யாத்திரை-

sivalaya yaaththirai (1)அகில இலங்கை சிவாலய துவிச்சக்கர வண்டி யாத்திரையானது யாழ். சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் கடந்த சிவராத்திரி தினத்தன்று ஆரம்பமாகியிருந்தது. இவ்வாறு புறப்பட்ட வீரர்கள் நேற்றைய தினம் 12.03.2014 மாலை ஏறத்தாழ 1700 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி முடித்து மீண்டும் சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் தமது யாத்திரையினை நிறைவு செய்துள்ளனர். இவர்களை வரவேற்ற வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்கினி ஐங்கரன் அவர்கள் இவ் வீரர்களை வாழத்தியதோடு அவர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் வழங்கி வைத்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறையில் பேரணி-

thesiya sugathara thinam kayts...thesiya sugathara thinam kayts,iதேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு ஊர்காவற்றுiயில் இன்று பேரணியொன்று நடைபெற்றது. இன்றுகாலை 9.00 மணியளவில் (13.03.2014) ஊர்காவற்றுறை பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள், போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு ஒர் அணியில் இணைய வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து வளவாளராக கலந்துகொண்ட உழவள மருத்துவர் திரு ரவீந்திரன் அவர்கள், போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் விளைவுகள் தொடர்பாக மிகவும் தெளிவாக விளக்கவுரையாற்றினார் இந்நிகழ்வில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர்காவற்றுறை பனை தென்னை வள அபிவிருத்திச் Read more

யாழ். சென்ற அதிசொகுசு பஸ் எரிந்து சாம்பல்-

bus burned..கொழும்பிலழருந்து யாழ். நோக்கிச் சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்றுஅதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றியதில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதென கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் பஸ்ஸில் திடீரென பிடித்த தீ வேகமாக பரவிய நிலையில் பயணிகள் அதிஸ்டவசமாக எவ்வித பாதிப்புமின்றி பஸ்ஸை விட்டு ஓடியுள்ளனர். இந்நிலையில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கனகராயன்குளம் பொலிஸார் நீரை கொண்டு தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் பஸ் முழுமையாக எரிந்த நிலையில் அதனுள் கொண்டு செல்லப்பட்ட பெறுமதியான பொருட்களை மீட்க முடியாதுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். பஸ்ஸில் பயணித்த சுமார் 50 பயணிகள் வேறு பஸ்ஸில் யாழுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையாளர் கட்சி செயலர்கள் சந்திப்பு-

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி அலுவலகங்களை, வேட்பாளர்களின் தராதரம் பாராது அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் அவ்வாறான அலுவலகங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கட்சி அலுவலகமொன்றை ஸ்தாபிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஏற்கனவே அரசியற்கட்சிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, வெற்று இடமொன்றில் வேட்பாளர்களின் நிழற்படங்களை காட்சிப்படுத்தி, கட்சி அலுவலகங்களை ஸ்தாபிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் குத்திக் கொலை-

untitledஅவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் இலங்கை வர்த்தகர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 20வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவில் குடியேறிய விசாகீசன் (ஈசன்) என்கிற 40வயதான இந்த தமிழ் வர்த்தகர் வீடுகள் காணிகளை வாங்கி விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்றுகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும், கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா பொலிஸார் கூறுகின்றனர். தமக்குக் கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து தாம் கொலை இடம்பெற்ற இடத்திற்கு சென்றபோது வீசாகீசன் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்திற்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை எனவும் அவுஸ்திரேலிய பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு-

BUsதெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணத்தை குறைப்பதற்கு அதிவேக பஸ் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் எல்.ஏ விமலரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, கடுவெலவில் இருந்து காலி வரையான அதிவேக மார்க்கத்தின் பஸ் கட்டணம் 420 ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது. கடுவெலவில் இருந்து மாத்தறையில் வரையில் 500 ரூபா அறவிடப்படுமென எல்.ஏ விமலரத்ன கூறியுள்ளார். இந்த கட்டண திருத்தம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மாத்திரமல்லாது, தனியார் பஸ்களுக்கும் செல்லுபடியாகும் என நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு தொடர்பில் விசாரணை-

mannarமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டையோடு மற்றும் எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளம் பகுதியூடான ஏ 9 வீதியின் 225ஆவது மற்றும் 226ஆவது மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மண்டையோடும் எச்சங்களும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில் காணியொன்றை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் இந்த மண்டையோடும், எச்சங்களும் அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனித எச்சங்களுக்கு அருகிலிருந்து காலணி, கைப்பை போன்ற பொருட்களுடன், கறுப்பு நிறத்திலான காற்சட்டை மற்றும் வெள்ளைநிற மேற்சட்டை என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்-

மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும், நாளையும் நடைபெறுகின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தினங்களில் வாக்களித்தத் தவறும், வாக்காளர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி தமது வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தல்கள் செயலகத்தினால் கோரப்பட்டுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைய, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கமலேஷ் ஷர்மா சந்திப்பு-

kamalesh Peris meetபொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மாவை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் லண்டனில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவ பொறுப்பை வகிக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுநலவாய நாடுகள் தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்தபோதே வெளிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்ளடக்கப்படும் வகையில் மனிதாபிமான செயற்பாடுகளுக்குரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் வருகையை கண்காணிப்பதற்கு 2.7 பில்லியன் செலவு-

அகதிகளின் வருகையை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எபட் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனினும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளை கொள்வனவு செய்யவிருப்பதாக பிரதமர் டொனி எபட் தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதி மீளாய்வுக்கு ஜப்பான் நிதியுதவி-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஜப்பான் 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோ இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிதியைக் கொண்டு சமூக மறுசீரமைப்பு வேலைத்திட்டம், வாழ்வாதார மேம்பாடு பெண்கள் அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் மர்மப்பொருள் வெடிப்பு-

imagesCAQZGPQAயாழ். மணியந்தோட்டம் 10ஆம் குறுக்கு வீதியிலுள்ள தோட்டக் காணிக்கு முன்பாக இருந்த குப்பைக்கு இன்று காலை தீ வைத்தபோது அதனுளிருந்து பாரிய சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்துள்ளது. இதனால், எவரும் காயமடையவில்லையெனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடி அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்று இராணுவத்தினர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 4ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இந்த வேலைத்திட்டம் தெரிவுசெய்யப்பட்ட 55 கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாபபமைச்சின் இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் 130 ஆசிரியர்களும், ஆயிரத்து 500க்கும் அதிகமான மாணவர்களும் பங்குபற்றியதாகவும் அவ்விணையத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விபத்தில் இலங்கையர்கள் காயம்-

karadiyanaru accidentஇந்தியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் (வயது 63) ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இவர்கள் பயணித்த மினிபஸ் டிரக் வண்டியொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது. எட்டு நாட்களுக்கு முன்னர் புதுடில்லி வந்த இச்சுற்றுலாப் பயணிகள், தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்காக ஆக்ரா வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது யமுனா நெடுஞ்சாலையில் நேற்று விபத்திற்குள்ளாகியுள்ளனர். மேற்படி சுற்றுலாப் பயணிகளும் பஸ் சாரதியான கைலாஷ் என்பவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.