இலங்கைக்கு கப்பல்களை வழங்கும் ஜப்பான்-

imagesஇலங்கையின் கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் நோக்கில் கண்காணிப்புக் கப்பல்களை ஜப்பான் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பானிய பிரதமர் இது குறித்து இலங்கைக்கு அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர கடற்பாதையூடாகவே ஜப்பானில் இருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் செல்கின்றன. அவற்றின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்தக் கண்காணிப்புக் கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்குக்கு காணி காவல்துறை அதிகாரம் இல்லை – எஸ் பி-

Vadakkitku kaani kavalthuraiகாவல்துறை மற்றும் காணி அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படாது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுள்ளை – பஸ்சர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பெற்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று இடம்பெறாமல் இருக்கவேண்டும் எனில் வடக்கு மாகாணத்திற்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரம் வழக்கப்பட கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more