சித்தன்கேணி மாதர் சங்க பொன் விழா
சித்தன்கேணி மாதர் சங்க மண்டபத்தில் சங்க தலைவர் திருமதி அஜித்தா சிவகரன் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழவில் பிரதம் விருநதினராக சங்கானைப் பிரதேச செயலர் திரு.அ.சோதிநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினரக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.ஆ.கோகுலன், கிராம சேவை அலுவலர் திரு.ந.சர்வேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாதர்சங்க மூத்த உறுப்பினர் திருமதி. மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களும் சங்கானை பிரதேச செயலர் காசிநாதன் நிரூபா அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
இவ் நிகழ்வில் சங்கத் தலைவர் திருமதி அஜித்தா சிவகுமார் அவர்கள் உரையாற்றுகையில் இன்று பொன் விழா காணும் இவ் மாதர்சங்கத்தின் தலைவியாக பதவி வகிப்பதை இடடு மகிழ்வடைகின்றேன். முன் ஒரு காலம் பெண்கள் வாழ்ந்த நிலை இன்று பாரிய அளவில் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ் நிலையில் நாம் அனைவரும் இணைந்து பெண்களை வலுவூட்ட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டு விட்டது. இதன் அங்கமாக எமது மாதர்சங்க எல்லைக்கு உட்பட்ட பெண்கள்; இன்று பல நிலைகளிலும் இடம் பிடித்துள்ளனர். எமது பிரதேச சபைத் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது நிலை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும் Read more