Header image alt text

வவுனியா பொது வைத்தியசாலைக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் அறுவைச்சிகிச்சை பொருட்கள் அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு)

IMG_4152தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க, சுவிஸ் “புங்குடுதீவு தாயகம் சமூகசேவை அகம்” அமைப்பினால் வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிக்கிச்சைப் பிரிவிற்கு தேவையான ஒருதொகுதி பொருட்கள் நேற்றுமுன்தினம் (01.02.2016) அன்பளிப்பு செய்யப்பட்டது.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்துகொண்டு அன்பளிப்பு பொருட்களை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.அகிலேந்திரன் அவர்களிடம் கையளித்தார்.

இவ் நிகழ்வில் இளைஞர் கழகத்தின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற அதிபருமான திரு சிவசோதி, தாதியர் ஒன்றிய இணைப்பாளர் திரு சோ.சுதாகர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க இணைப்பாளர் திரு. கோபி மோகன், கழகத்தின் அமைப்பாளர் திரு லி.சியாமளன், ஊடக இணைப்பாளர் திரு வ.பிரதீபன், கழகத்தின் உறுப்பினர்களான திரு எஸ்.சுகந்தன் திரு எஸ்.கஜூரன் திரு எஸ்.ஜனகன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Read more

யாழில் திருநெல்வேலி பஸ் விபத்தில் மூவர் படுகாயம்-

7867தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பயணித்த பாடசாலை மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியை அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது. மேலும் இந்த விபத்தில் என்.டி.பி வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தனியார் பேருந்து சாரதியை கைது செய்தததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

புலிகளுடன் தொடர்பு விடயமாக ஜேர்மனியில் இலங்கையருக்கு தண்டனை-

detettttபுலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு 18 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனிய பிரஜைக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது. இந்நிலையில், 2007-2009ம் ஆண்டு காலப் பகுதியில் யோகேந்திரன் புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுக்காக குறித்த நபர் 81000 யூரோக்களை திரட்டியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகவும் அவற்றை புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் யோகேந்திரன் விசாரணைகளின்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கை-

ranil sarathஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல். சரத் பொன்சேக்காவிற்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதேவேளை இதனடிப்படையில், மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அத்துடன், முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு கடவை அமைத்து தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்-

kilinochiகிளிநொச்சி உதயநகர் துர்க்கை அம்மன் வீதியை மக்கள் பயன்பாட்டிற்கேற்ப பாதுகாப்பு கடவையாக அமைத்து தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதியினை கிளிநொச்சி வைத்தியசாலை, கல்வி திணைக்களம், பாடசாலைகள், மற்றும் பேருந்து சேவைகளிற்காக நாளாந்தம் பெருமளவான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பான கடவையற்ற குறித்த வீதியை மூடுவதற்கு இன்று புகையிரத திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச மக்கள் வீதியின் இரு மருங்கிலும் தடைகளை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் அதிகாரி, மற்றும் புகையிரத பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் குறித்த வீதியை அப்புறபடுத்துவதை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் உயர் மட்டத்திற்கு எடுத்து சென்று தீர்வினை பெற்றுத் தருவதாகவும், புகையிரத பாதுகாப்பு அதிகாரி மக்களிடம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்-

basilமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆஜராகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் குறித்து முன்னாள் அமைச்சரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.

இன்று முற்பகல் 10 மணியளவில் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பசிலிடம் தற்போது வாக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

35 பேர் கொண்ட வெளிநாட்டு தூதுவர்கள் குழு யாழ். விஜயம்-

fdgfஇலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் 35பேர் கொண்ட குழுவினர் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர். விஜயம் மேற்கொண்ட தூதுவர் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் போருக்கு பின்னான நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர் இலங்கை நாட்டில் தூதுவராலயங்கள் இல்லாத நாடுகளின் தூதுவர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள தூதுவர்களே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் வடமாகாண ஆளுனரின் ஒழுங்கமைப்பில் வடபகுதிக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்தனர். இதன்போது வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரை சந்தித்து வடபகுதியின் நிலைமைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான அவதானங்களை மேற்கொண்டனர். இந்த சந்திப்பு இன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.

புகலிடக் கோரிக்கையாளரை முகாம்களில் தடுத்துவைப்பது சட்டரீதியானது-

dfgfபுகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை சட்டரீதியானது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்துவைப்பது சட்டவிரோதமானது எனக்கூறி பெண்ணொருவர் தொடுத்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து 37 குழந்கைகள் உட்பட 250பேர் நவ்றுவிலுள்ள முகாமிற்கு அனுப்பப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியா கொன்சவேர்ட்டிவ் அரசாங்கத்திற்கும் புகலிடக் கொள்கையாளர்கள் குறித்த அதன் கடும் கொள்கைகளிற்கும் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்றவேளை கைதுசெய்யப்பட்டு நவ்றுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பங்களாதேஸ் பெண்மணியொருவரே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். பின்னர் அவர் கர்ப்பிணி என தெரியவந்ததை தொடர்ந்து அவுஸ்திரேலிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டவேளை அங்கு பிரசவித்திருந்தார்.

புளொட் தலைவர் பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன் லண்டனுக்கு விஜயம்-(படங்கள் இணைப்பு)

vxஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 29.01.2016 அன்று ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துரையாடல்களை நிறைவுசெய்து கொண்டு நேற்றுப்பகல் லண்டனுக்குச் சென்றுள்ளார்.

அவர் லண்டனைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து லண்டன் சிற்றி விமான நிலையத்தில் வைத்து கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல். நாளை (03.02.2016) புதன்கிழமை பி.ப 18:00 மணியளவில் லண்டன் EastHam Town Hall, 328 Barking Road, E6, 2RP என்ற முகவரியில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

கழகத்தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அழைக்கப்படுகின்றீர்கள்.
தயவுகூர்ந்து தங்கள் வரவை உறுதிப்படுத்தவும்,

மேலதிக விபரங்களுக்கும்:
07985 156814, 07905 180636
“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
பிரித்தானியக் கிளை PLOTE-UK)

Read more

இலங்கையில் மீண்டும் நீராவி ரயில் சேவை-

neeravi railஇலங்கையின் ரயில் சேவை வரலாற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நீராவி ரயில் கொழும்பிலிருந்து பதுளை வரை சென்றுள்ளது. இலங்கையில் ரயில் சேவை அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகின்றன. ரயில் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது. இந்நிலையில் இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதால் இன்று இச்சேவை நடைமுறைப்படுத்தப்பட்டதோடு பல சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலில் பயணித்தனர். மேலும் அட்டன் புகையிரத நிலையத்தில் குறித்த புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மேற்படி புகையிரதத்தை புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் தேசிய கீதம் பாட எடுத்த தீர்மானத்திற்கு உதய கம்மன்பில எதிர்ப்பு-

thesiyamஇலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு விரோதமானது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரவும் முடியும் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 7வது அத்தியாயத்தின் படி, இலங்கையின் தேசிய கீதம் “சிறீலங்கா மாதா..” எனவும் 1987ம் ஆண்டின் பின்னர் அது தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் தேசிய கீதம் பல மொழிகளில் பாடப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு எனவும், அவ்வாறானதொரு நிலை இலங்கையில் இல்லை எனவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பூர் சிறுவன் கொலை தொடர்பில் 15 வயது சிறுவன் கைது-

childதிருகோணமலை சம்பூர் 7ஆம் வட்டாரத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான சிறுவனே இன்று நண்பகல் ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூதூர் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசாரணைக்குழுவினரால் சந்தேகநபரான உயிரிழந்த சிறுவனின் மைத்துனன் கைது செய்யப்பட்டுள்ளான். சந்தேகநபரான சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரான சிறுவனை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பூர் 7 ஆம் வட்டாரம் பகுதியில் வசித்த குகதாஸ் தர்சன் கடந்த 25 ஆம் திகதி மாலை காணாமற்போன நிலையில் அன்று நள்ளிரவு குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். 6 வயது சிறுவனான குகதாஸ் தர்சனின் மரணம் தொடர்பில் 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரியில் தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண் கைது-

goldயாழ். சாவகச்சேரி பகுதியில் 3,90,00,000 பெறுமதியான சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் இன்று அதிகாலை 3.50 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான பெண்னொருவரே 7 கிலோகிராம் பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய விசேட பொலிஸ் பிரிவினூடாக சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளுக்காக யாழ். தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேற்படி தங்க கட்டிகளை மாதகல் பகுதியில் இருந்து வேனில் எடுத்துச் செல்லும்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணிடம் விசாரணைகள் தொடர்வதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் ஐதேமு.வில் போட்டியிட ஐதேக முடிவு-

UNP (2)எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட, அக் கட்சியின் செயற்குழு எதிர்வரும் 8ம் திகதி கூடவுள்ளது. இதேவேளை, மறைந்த எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சியின் செயற்குழு தீர்மானிக்கவுள்ளதாகவும், பெரும்பாலும் சரத் பொன்சேகாவுக்கு இந்த வாய்ப்பு கிட்டலாம் எனவும் தெரியவருகின்றது.

எம்பிலிப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது-

policeகுற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிட்ட காரணத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தனது கணவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காலம் தாழ்த்தாது உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞனின் மனைவி, 10 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கதல் செய்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதி பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு-

high wayதெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

மஹரகமவில் இருந்து காலி மற்றும் மாத்தறை வரை தற்காலிக அடிப்படையில் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் ஊழியர்கள் போக்குவரத்தில் இருந்து விலகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பஸ் சங்கங்கள் எழுப்பும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என தேசிய போக்குவரதது; ஆணைக்குழு தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்திர கூறியுள்ளார்.

தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல்-

Sithar ploteதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)ன் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல்.

காலம் : 03.02.2016 புதன்கிழமை 

நேரம் : பி.ப 18:00

இடம் : EastHam Town Hall, 328 Barking Road, E6, 2RP. UK

கழகத்தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அழைக்கப்படுகின்றீர்கள். 

தயவுகூர்ந்து தங்கள் வரவை உறுதிப்படுத்தவும்,

மேலதிக விபரங்களுக்கும்:
(044) 079 85156814

(044) 079 05180636

“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
பிரித்தானியக் கிளை (PLOTE-UK)

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_4153தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வழங்கும் மேற்படி நிகழ்வு,

கழகத்தின் அறிவொளி இல்லத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

வவுனியா சிதம்பரபுரம் அகதி முகாமைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இவ் செயற்றிட்டத்தில் கழகத்தின்

அமெரிக்க கிளை இணைப்பாளர் திரு கோபி மோகன், கழகத்தின் உறுப்பினர் திரு எஸ்.சுகந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

Aகிளிநொச்சியில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தால் கிளிநொச்சி மற்றும் முல்லை மாணவர்களக்கு 63000 ரூபா பெறுமதியான 6 துவிசக்கரவண்டிகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இம் மாணவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்துக்கு விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து கனடாவில் வசிக்கும் தங்கராஜா முகுந்தன் என்பவரால் வழங்கிய நிதியில் இருந்து இவ் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இத் தருணத்தில் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் உறவான த.முகுந்தன்(கனடா) அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இதன்படி உருத்திரபுரம் மகா வித்தியாலய மாணவி – டானியல் றோஜினி, குரவில் தமிழ் வித்தியாலய மாணவி – தமிழினி, உடையார்கட்டு அ.த.கலவன் பாடசாலை மாணவி – கலைநிலா, முள்ளியவளை கலைமகள் வித்தியாசாலை மாணவி – கவியரசி, கிளிநொச்சி கோணாவில் மாகாவித்தியாலய மாணவிகளான – இ.லிவனசிகா மற்றும் இக.சுடர்வாணி ஆகியொர்க்கே மேற்படி துவிச்சசக்கரவண்டிகள் அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளன. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
Read more

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-

jaffnaயாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், இன்று (இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். வட மாகாணத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில், பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென இவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். அத்துடன், தமது கோரிக்கைகள் மற்றும் வட மாகாணத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரமொன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தமது பிரச்சினைக்கு நல்லாட்சி அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் இன்றி இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமில்லை-பிரதமர்-

ranilநல்லிணக்கம் இன்றி பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இலங்கை நாடாளுமன்றமே ஆசியாவிலேயே வலுவான நாடாளுமன்றமாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் நல்லிணக்கத்தையும, பொறுப்புக் கூறுதலையையும் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முழுமையான அணுகு முறையின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொறுப்புக்கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை, நல்லிணக்கம் இன்றி பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இதற்கான முயற்சிகளையே மேற்கொண்டுள்ளோம், இலங்கை மக்கள் நாட்டில் மனித உரிமைகளை மீள ஏற்படுத்தி அதனை வலுப்படுத்துவதற்கான ஆணையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

திருகோணமலையில் ஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல்-

germany shipஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல் ஜேர்மன் நாட்டின் 420 பயணிகளுடன் கூடிய அதிசொகுசு யுரோப்பா 2 எனும் குறூஸ் வகை உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று காலை திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் இறங்குதுறைக்கு வருகை தந்துள்ளது. மொரிசியஸ் நாட்டிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பலானது இலங்கையின் பிரதான துறைமுகங்களாகிய காலி, கொளும்பு, அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் தரித்து நின்றதுடன் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்தது. இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இது போன்ற ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் நாட்டின் பிரதான துறைமுகங்களில் தரித்து நின்றது எனவும் இதுபோன்ற முயற்சிகள் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்யமுடியும் என ஹபட் கிளொயிட் லங்கா தனியார் கூட்டுத்தாபனத்தின் பிரதம முகாமையாளர் சதுரநிசங்க தெரிவித்தார். மேலும் குறித்த கப்பலானது இன்றைய தினம் இந்தியா நோக்கி பயணத்தை தொடரவிருப்பதாக கூறப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ஷவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை-

shranthiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்க்ஷ பாரிய ஊழல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சுமார் இரு மணி நேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளது.

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான 55 இலட்சம் ரூபா பெறுமதி வீடொன்றை அப்போது தனது ஊடகச் செயலாளராக கடமையாற்றிய மிலிந்த ரத்நாயக்கவுக்கு 5 இலட்சம் ரூபாவுக்கு வழங்க பரிந்துரை

செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சரணடைந்த இரு பிக்குகளும் விளக்கமறியலில் தடுத்து வைப்பு-

courts (1)அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பொலிஸில் சரணடைந்த இரு பிக்குகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் எனக் கூறப்படும் மாகல்கந்தே சுதந்த மற்றும் படல்குபுரே அரியஷாந்த ஆகிய இரு துறவிகளே இவ்வாறு சரணடைந்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. எதுஎவ்வாறு இருப்பினும் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, மாகல்கந்தே சுதந்த தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் உள்நோக்கம் தான் உள்ளிட்ட குழுவினருக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவலையடைவதாகவும், எனினும் சட்டத்தை மதித்தே பொலிஸில் சரணடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அறுவர் நாளை பொலிஸில் சரணடையவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யோசித்தவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை-

yosithaநிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, யோசித்தவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் படி, யோசித்த உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தீர்வுத் திட்டத்திற்கான வட மாகாண சபையின் குழுவினது முதலாவது கூட்டம்-

NPCவட மாகாண சபையினால் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபை அமர்வில் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிப்பதற்கான 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் முதல் அமர்வு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரின் இணைத்தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து தலைமன்னார் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்-

mannarஉள்ளுர் இழுவைப் படகுகளினால் தொடர்ச்சியாக தலைமன்னார் மீனவர்கள் பாதிப்படைந்து வருவதாகவும், தற்போது உள்ளுர் இழுவைப் படகுகளினால் வறிய மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பாதிக்கப்பட்ட தலைமன்னார் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். தலைமன்னார் மேற்கு மீனவர் சங்கம் மற்றும் தலைமன்னார் ஸ்ரேசன் மீனவ சங்கம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றிணைந்து இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊர்வலமாக வந்துள்ளனர். பின்னர் தலைமன்னார் மீனவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை தலைமன்னார் புனித லோறன்ஸ் ஆலய சபையூடாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர். தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சுமார் 450 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். Read more

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-(படங்கள் இணைப்பு)

TMPஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார். தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான உப குழுவின் அறிக்கையின் விபரம் வருமாறு.

தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் தீர்வு ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு ஒன்றை நடத்துவதற்கு உதவும் வகையில் அரசியல் தீர்வு தொடர்பிலான முக்கிய வரையறைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைத் தருமாறு பணித்து 27 டிசம்பர் 2015 அன்று ஓர் உபகுழுவை நியமித்தது.

பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளும் இவ் உப குழுவில் இடம் பெற்றனர். 2016ஜனவரியில் இடம்பெற்ற பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் இந்த உப குழுவானது இவ்வறிக்கையை பேரவையின் கவனத்திற்கும், அதனைத் தொடர்ந்து மக்கள் கலந்துரையாடலுக்குமாக சமர்ப்பிக்கின்றது.
Read more