Header image alt text

mulivaikal16முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றுகாலை 9.30 மணியளவில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்தோர்க்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நினைவு தினத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வட மாகாணசபை அமைச்சர்கள் குருகுலராஜா, வைத்தியக்கலாநிதி சத்தியலிங்கம், பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், க.சிவநேசன், பரஞ்சோதி, ஜி.ரி.லிங்கநாதன், து.ரவிகரன் உள்ளிட்ட வட மாகாணசபை உறுப்பினர்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும், கலந்துகொண்டிருந்தனர்.

Read more

 ஒலி ஒளிக்காட்சி இணைக்கப்பட்டுள்ளது

mulivaikal00முள்ளிவாய்க்கால் 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மே 18 இன்று நடைபெற்றது,

கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். Read more

vavuniyaவவுனியா மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பிட மத்திய நிலையத்துக்கு அருகாமையில் முதலமைச்சர் அனுமதி வழங்கினால் வவுனியா வர்தகர் சங்கம் கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர் சங்கம் என்பவற்றுக்கு இடம் ஒதுக்கும்பொழுது அவற்றுடன் ஊடகவியலாளர் சங்கம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் என்பனவற்றுக்கும் இடம் ஒதுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் வவுனியா மாவட்டத்துக்கான மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இக் கோரிக்கையை முன்வைத்தார். Read more

sithamparamசிபிஐ மற்றும் பிற சில அரசு முகமைகளை பயன்படுத்தி, தனது மகன் கார்த்தி சிதம்பரத்தையும், அவரது நண்பர்களையும் மத்திய அரசு குறி வைக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ப. சிதம்பரம் வசித்து வந்த இல்லம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய இடங்களில், சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை இன்று செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் நூற்றுக்கணக்கான சூழல்களில் ஒப்புதல் அளித்துள்ளது என்னை அமைதிப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றார் ப.சிதம்பரம். Read more

northநினைவேந்தல் நிகழ்வுகள் என்ற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டி வரும். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் என அறிவிக்கப்பட்டு இம் மாதம் 12ம் திகதி தொடக்கம் வடக்கில் பல இடங்களிலும் நினைவு கூரப்பட்டு வருகின்றமையும் கடைசிநாள் மே 18 முள்ளிவாக்காலில் இறுதிநாள் அஞ்சலி நடைபெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

vavuniyaவவுனியா மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more

thumb_SB_Disanayakaவட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின்  உச்சகட்டமாக அமைந்துள்ளது. மீண்டும் சர்வதேச அழுத்தங்களுக்குள் அரசாங்கத்தை தள்ளி நல்லிணக்கத்தை குழப்பி அரசாங்கத்தை  சீண்டிப்பார்க்கிறார் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக தெரிவித்தார்.

நல்லிணக்க நகர்வில் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு முதல்வர் சர்வதேச தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

us_meet_north_cmஅமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷ;hப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அமெரிக்க குழுவினர் இங்குள்ள நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாக, வடக்கு முதல்வர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, Read more

thatkolai01தொட்டிலில் கதறியழுத ஆறு மாத குழந்தையை விட்டு விட்டு தூக்கில் தொங்கிய இளம் தாய் குடும்ப பெண்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இச் சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில்  வசித்துவரும்  ஆறு மாத கைக்குழந்தையின் தாய் சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (15) காலை 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். Read more

koreaவட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் – உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென் கொரியாவில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள சில நாட்களில் நடைபெற்றுள்ள இந்த ஏவுகணை சோதனை, தென் கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும். வட கொரியா தொடர்பான விடயங்களில் அமெரிக்கா தன்னுடைய கடும் அணுகுமுறையை தொடரும் என்று ஹேலி தெரிவித்திருக்கிறார். Read more