Header image alt text

ssஇந்திய பிரதமரின் மலையக விஜயத்தை முன்னிட்டு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பரிட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய உலங்கு வானூர்தியினால் ஐந்து வீடுகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறத்து வைக்க இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு நேற்று இடம்பெற்றது. இந்திய உலங்கு வானூர்தியினால் இரண்டு பரிட்சார்த்த நடவடிக்கையின் போதே டன்பார் மைதானத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள் 5இன் கூரைகள் சேதமாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். Read more

p1புலம்பெயர் உறவான ஜேர்மன் நாட்டை சேர்ந்த இரு சகோதர உறவுகளான லதீஸ் லவீதா ஆகிய சகோதரர்கள் தங்களது பேரன் பேத்திகள் மற்றும் யுத்தத்தினால் தாய் தந்தையை இழந்தவர்கள் எல்லோரின் ஆத்ம சாந்தி வேண்டி

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 15 குடும்பங்களைத் தெரிவு செய்து குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பொதிகளை அன்பளிப்பாக வழங்கி தங்களது தர்ம காரியத்தை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அதன் தலைமை காரியாலயத்தில் வைத்து நாடாத்தியுள்ளார்கள். Read more

jailவெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சுமார் 575 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

asமாலைதீவின் மூன்றாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாலைதீவு ஜனநாயக கட்சி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. மூன்று முக்கிய நகர சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் வெற்றிப் பெற்று ஜனநாயகக் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலைதீவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. மாலைதீவின் ஜனநாயகக் கட்சி அந் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

sdsdfவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பல அதிநவீன யுக்திகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அரிஜோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான சூழ்நிலைகள் மற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. Read more

sdfdகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபாரில்; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது,

இந்த நியமனம் 5வருட காலத்துக்குரியதாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. Read more

w7வருடாந்த உற்சவ திருவழாவை முன்னிட்டு துவிச்சக்கரவண்டி மற்றும் குடும்பங்களுக்கு தலா ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் என உதவி தேவைபடும் குடும்பங்களை தெரிவுசெய்து சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக பல்லாயிரகணக்கான உதவித்திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்.

ஒரு ஆலய நிர்வாகம் தாம் வாழும் சழுகக்திற்கு எப்படியான சேவைகளை செய்ய வேண்டும் என்பதை சண்டிலிப்பாய் சீரணி நாக பூசணி அம்மன் ஆலயமும் அதன் நிர்வாகமும் செயற்படுத்தியவிதம் ஏனைய ஆலயங்களும் இவர்களை பின் பற்றி தாமும் முன்னுதாரனமாக அறக்கருமங்கள் செய்ய வேண்டும் என்பதை சுட்டி காட்டுவதாக அமைந்துள்ளது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்) Read more

asவடமாகாண சபையின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டனர்.

இதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது வாயில் கதவுகளை பூட்டி தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார். இதனால், போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர். Read more

geethaகூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

tyuyஇலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்கள் இருவரும் தூதுவர்கள் இருவரும், ஜனாதிபதி இலத்தில் வைத்து, தங்களது நியமனக் கடிதங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்றுகாலை கையளித்துள்ளனர்.

நேபாளம் (திரு. குஷ்டி நகுரா ஆர்டீயசா) மற்றும் இந்தோனேஷியா (திரு. பிஷ்வாம்பர் பியாகுர்யால்) ஆகிய புதிய தூதுவர்களும், மோல்டா இராச்சியம் (செல்வி ஜோஎனா மேரி கெம்ப்கெர்ஸ்) மற்றும் நியூசிலாந்து (திரு. ஸ்டீபன் போர்க்) ஆகிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு தங்களது நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.